Categories: சமூகம்

கொரோனா காரணமாக வேலையிழந்த வீட்டு வேலை செய்து வந்த இந்த பெண்கள் தற்போது வருமானத்திற்க்காக சாலையோரம் உணவு மற்றும் இட்லி மாவை விற்பனை செய்கின்றனர்.

இந்த கொரோனா நேரத்தில் வீட்டு வேலை செய்பவர்கள், சமையல் வேலை செய்பவர்கள், தச்சர், பெயிண்டர் போன்றோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினப்பாக்கம் அருகே உள்ள சீனிவாசபுரம், டூமிங் குப்பம், நொச்சி நகர், நொச்சி குப்பம் போன்ற பகுதிகளில் வசித்து வரும் சுமார் முப்பது நபர்கள் ஆர்.ஏ.புரம் எம்.ஆர்.சி நகர் பகுதிகளில் மாத சம்பள அடிப்படையில் வீட்டு வேலைகளை செய்து வந்தனர். கொரோனா காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவர்கள் வருமானம் இல்லாமல் இருந்து வருகின்றனர். ஆனால் சிலர் வருமானத்திற்க்காக புதிய சில முயற்சிகளை செய்து வருகின்றனர். ரேணுகா எம்.ஆர்.சி நகரில் வேலை பார்த்து வந்த ரேணுகா என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டில் உள்ள ரேஷன் அரிசியை வைத்து வெளியில் இருந்து உளுத்தம் பருப்பை வாங்கி இட்லி மாவை தயார் செய்து மெரினா லூப் சாலையில் விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் இவருக்கு சிறிய அளவிலான வருமானம் கிடைக்கும் என்று என்று கூறுகிறார்.

இதே போல் வேறொரு பகுதியில் வசித்து வரும் அம்பிகா என்பவர் கொரியன் ஒருவரது வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர் இப்போது மாலை வேலையில் பிரிஞ்சி செய்து இங்குள்ள சாலையில் விற்பனை செய்து வருகிறார்.

இதுபோன்று இந்த பகுதியில் வசித்து வரும் பல நபர்கள் தங்களுடைய வருமானத்திற்க்காக புதிய முற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

1 week ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 weeks ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 weeks ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 weeks ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

1 month ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

1 month ago