அவர்களுக்கு 2021ல் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
மின் வினியோகத்திற்கான மீட்டர்கள் இன்னும் அமைக்கப்பட உள்ளதாகவும், சில சிறிய ‘டச்-அப்’ வேலைகள் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதலமைச்சர் சமீபத்தில் இந்த குடியிருப்புகளை அடையாளமாக திறந்தபிறகு, இந்தத் துறைக்கான மாநில அமைச்சர் டி.எம்.அன்பரசன், மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு மற்றும் உள்ளூர் திமுகவினருடன் இணைந்து, சிலரிடம் சாவியை அடையாளமாக வழங்கும் விழாவை சமீபத்தில் தொடங்கினர்.
“கொரோனா தொற்றுநோய் தாமதத்தை ஏற்படுத்தியது, ஆனால் கடந்த ஆண்டு எங்களுக்கு குடியிருப்புகள் கிடைத்திருக்க வேண்டும். நாங்கள் வெளியில் தற்போது தங்கியிருக்கும் வீட்டிற்கு கொடுக்கும் வாடகை பணத்தை யார் கொடுப்பார்கள்?”, என்று இங்கு வசித்து வந்த மக்கள் குமுறுகின்றனர்.
2019 டிசம்பரில் சுமார் 570 குடும்பங்கள் இந்த வளாகத்திலிருந்து வெளியேறியது, இங்கு மூன்று பிளாக்குகளில் 630 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இங்கு வசிக்கும் உரிமையுள்ள அனைவருக்கும் சமீபத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் அனைவரும் விதிகளை பூர்த்தி செய்யும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், அவ்வாறு சமர்ப்பித்தவர்களுக்கு மட்டுமே குடியிருப்பின் சாவி வழங்கப்படுகிறது.
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…
மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…