ஆரம்ப பள்ளிகள் திறந்த முதல் நாளில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சில விளையாட்டுகள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஆரம்ப, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. நிறைய மாணவர்கள் சீருடை அணிந்து தங்களுடைய பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.

பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சில இடங்களில் இனிப்புகள் மாணவர்களுக்கு வழஙங்கப்பட்டது. அரசு ஆணைக்கிணங்க மாணவர்களுக்கு சில விளையாட்டுகள் நடத்தப்பட்டது. சில இடங்களில் பாடல்கள் பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.

சாந்தோம் பேராலயம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் பிரைமரி பள்ளியில் மாணவர்கள் அனைவரையும் அவரவர் வகுப்பில் அமரவைத்து அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சில விளையாட்டுகளை நடத்தினர்.மேலும் விருப்பப்பட்டவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என்றும், பள்ளிக்கு வராதவர்கள் மேல் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் ஆன்லைன் வகுப்புகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago