தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் சில மாற்றங்கள் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. சமீபத்தில் நீதிமன்றம் அரசின் கோவில்கள் அனைத்திலும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக நிர்வாக ஆணையர்களின் கீழ் இயங்கி வருகிறது என்றும் இனிமேல் கோவில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தலைமையில் இயங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. எனவே இனிமேல் அரசு கோவில்கள் அனைத்தும் அறங்காவலர்கள் தலைமையில் இயங்கும்.
இதன் விளைவாக பெரும்பாலான கோவில்களில் நிர்வாக ஆணையர்கள் மாற்றப்படுவார்கள். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஆணையர் காவேரி அவர்கள் ஆணையராக பல ஆண்டுகளாக பணியாற்றிவருகிறார். இந்த இடத்திற்கு இனிமேல் கபாலீஸ்வரர் கோவிலுக்கு பரம்பரை பரம்பரையாக தொண்டற்றி வரும் பூந்தமல்லியில் வசித்து வரும் வேளாளர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்க வாய்ப்புள்ளது. எனவே கூடிய விரைவில் கபாலீஸ்வரர் கோவிலில் தலைமை நிர்வாக பொறுப்பில் புதியதாக ஒருவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…