மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள தபால் நிலையத்தில் உள்ள சிறப்பு பார்சல் முன்பதிவு கவுன்டர் இப்போது பிஸியாகவே காணப்படுகிறது. ஏனென்றால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இனிப்பு பொட்டலங்கள் மற்றும் புத்தகங்களை பார்சல் அனுப்பி வருகின்றனர்.
கடந்த மூன்று வாரங்களாக, அமெரிக்காவிற்கான முன்பதிவுகள் அதிகமாக இருந்ததாக தபால் துறை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது இந்தியாவிற்குள் இருக்கும் இடங்களுக்கான பார்சல் சேவைகள் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தீபாவளி சிறப்பு முன்பதிவு கவுண்டர் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் (ஞாயிற்றுக்கிழமை விடுமுறை).
நீங்கள் அனுப்ப உள்ள இனிப்பு வகைகளை பேக் செய்யும்படி தபால்துறை ஊழியரிடம் நீங்கள் கேட்கலாம். உங்கள் வீட்டிற்கு வந்து பார்சல்களை எடுத்துச் செல்ல தபால் ஊழியரை அழைக்கலாம் தொலைபேசி எண் : 94548 42115. இந்த சேவைகளுக்கு தனியே சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படும்.
முன்னணி கடைகளும் இந்த வசதியைப் பயன்படுத்தி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருவதாக கூறுகின்றனர். கடந்த ஆண்டுகளில், நவராத்திரி கொலு பொம்மைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான முன்பதிவுகளை தபால் துறை சிறப்பாக கையாண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…