தேர்தல் 2021

மயிலாப்பூர்வாசிகளின் வாக்குப்பதிவு குறிப்புகள்; உங்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.

வெண்ணிலா டி.என்
குமாரராஜா பள்ளியில் வாக்களிக்க அதிக அளவிலான மூத்த குடிமக்கள் வந்திருந்தனர். இதுவரை இவ்வளவு மூத்தகுடிமக்களை வாக்களிக்கும் இடத்தில் பார்த்ததில்லை.

அஸ்வின் ஹரி
சில குழப்பங்களுக்குப் பிறகு மந்தைவெளியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் 7:30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அடையாள அட்டை ஆதாரம் இல்லாமல் வாக்களிக்க வந்த சில மூத்த குடிமக்கள் இருந்தனர். பூத் சீட்டுகள் தேவையில்லை என்ற செய்தியை தவறாக புரிந்து கொண்டு அடையாள அட்டை எடுக்காமல் வந்திருந்தனர்.

ஆதி வரகன்
(செயின்ட் அந்தோனி பள்ளியில்) ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி கவுண்டர்கள் இருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகே ஆண்களுக்கான ஓட்டு போடும் இயந்திரம் வேலை செய்யத் தொடங்கியது, ஆனால் பெண்களுக்கான ஓட்டுபோடும் இயந்திரம் நீண்ட நேரமாகியும் இயங்கவில்லை. என் அம்மா வாக்களிக்க நீண்ட நேரம் பிடித்தது.

பிரசன்னா ராமசாமி
நான் சரியாக காலை 7 மணிக்கு ராஜா முத்தையா பள்ளிக்கு வாக்களிக்க சென்றேன். 7.20 மணி வரை அவர்கள் ஏதோ தடுமாறிக் கொண்டிருந்தார்கள். சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னரே வாக்குப்பதிவை தொடங்கினர்.

(மயிலாப்பூர் டைம்ஸ் வாக்குப்பதிவு சம்பந்தமான உங்களது கருத்துக்களை இங்கே வெளியிடுவோம். நீங்களும் வாக்குப்பதிவு சம்பந்தமான கருத்துக்களை அனுப்பலாம்.)

admin

Recent Posts

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

22 hours ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

22 hours ago

மாதவப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவோணப் பெருவிழா – ஏப்ரல் 30 முதல் மே 10 வரை.

மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…

2 days ago

பி.எஸ்.மெட்ரிக் பள்ளியில் (வடக்கு) இந்த கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பில் வணிகவியல் பாடம் அறிமுகம்.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…

2 days ago

விவேகானந்தா கல்லூரியின் (1968 – ’71) பி.ஏ. பொருளாதாரம் பிரிவு முன்னாள் மாணவர்கள் மே 1 அன்று சந்திப்பு

விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…

3 days ago

இந்த மந்தைவெளி குடியிருப்பாளர் இரயில் பயணத்தின் போது ‘காணவில்லை’

மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…

3 days ago