தேர்தல் 2021: மயிலாப்பூரில் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி இருக்கும்போது, ​​வாக்குச்சாவடிகளில் மட்டும் மதியம் வரை மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது

பகல் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் மயிலாப்பூர் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு செய்வதில் மும்முரமாக இருந்தனர். மயிலாப்பூரில் பொது இடங்கள் எப்படி இருந்தது?

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் மக்கள் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது, சுமார் 11: 30 மணியளவில் ஒரு சில நபர்களே இருந்தனர். ஆனால் ஏற்கனெவே அறிவிக்கப்பட்ட 1008 சங்கு அபிஷேகம் கோவிலின் ஒரு பகுதியில் நடந்துக்கொண்டிருந்தது. இதில் மிகவும் குறைந்த அளவு மக்களே பங்கேற்றிருந்தனர்.

கோவிலுக்கு வெளியே தெற்கு மாடவீதியும் வெறிச்சோடி காணப்பட்டது. இங்கு ஒரு சில வணிகர்களே கடைகளை திறந்து வைத்திருந்தனர்.

எம்டிசி பஸ் நிறுத்தங்களில் சிலர் அமர்ந்திருப்பதைக் பார்த்தாலும், லஸ் சந்திபில் வழக்கமாக செல்லும் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது..

மந்தைவெளியில் உள்ள மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியில் இருந்த சில ஊழியர்களைத் தவிர்த்து மற்றபடி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோன்று பகல் நேரத்தில் சாந்தோம், பட்டினபாக்கம் மற்றும் டாக்டர் ஆர். கே.சாலை பகுதிகளிலும் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆனால் மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

admin

Recent Posts

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா. மே 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 28ல் தேர் திருவிழா.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…

4 days ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான திரு. பி. வெங்கட்ரமணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…

1 week ago

ஆர். ஏ. புரத்திலுள்ள டாஸ்மாக் ‘எலைட்’ கடையை மூட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை.

ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…

2 weeks ago

மந்தைவெளியில் உள்ள டாஸ்மாக் மது விற்பனைக் கடை நிரந்தரமாக மூடப்பட்டது.

மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…

2 weeks ago

இந்த டிரை கிளீனிங் வாகனம் வீட்டு வாசலுக்கே வந்து சேவை வழங்குகிறது.

உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…

2 weeks ago

தயாராகி வரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரின் புதிய அலுவலகம்.

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…

2 weeks ago