தேர்தல் 2021

தேர்தல் 2021: மயிலாப்பூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் சுமூகமாக நடந்து முடிந்ததா?

நேற்றைய தேர்தல் சில இடங்களில் சுமூகமாக நடந்து முடிந்தது. நேற்று நடந்த தேர்தல் சில இடங்களில் சில கசப்பான அனுபவங்களை தந்தது. சில வாக்குச்சாவடிகளில் விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருந்தது. சாந்தோம் பள்ளியின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் குப்பம் பகுதியில் நடைபெற்ற கட்சிகளுக்கிடையேயான அடிதடிகள் வாக்குச்சாவடி வரை வந்தது. மேலும் வாக்குப்பதிவு செய்வதற்கு வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட கையுறைகளை வாக்காளர்கள் ஆங்காங்கே வீசி சென்றனர்.

மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை கோவிட் நோயினால் பாதிக்கப்படுவார்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருந்தது. அதே நேரத்தில் பொதுமக்களும் வாக்களிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் பணியாற்ற வாக்குச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கவச உடைகள் வழங்கப்பட்டது. ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாக்களிக்க வரும் செய்தி கேட்டு பத்திரிக்கை புகைப்படகலைஞர்கள் குழுமி இருந்தனர். அவரும் குறிப்பிட்ட நேரத்தில் வந்து வாக்களித்து சென்றார். இதுபோல் மேலும் சில வாக்குச்சாவடிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் வாக்களித்தனர். கடைசியாக ஏழுமணிக்கு பின் தேர்தல் அலுவலர்கள் ஈவிஎம் இயந்திரங்களை மூடி முத்திரையிட்டு லாரியில் வாக்குகள் எண்ணும் மையத்திற்கு அனுப்பிவைத்தனர்.

admin

Recent Posts

ஆர்.ஏ.புரம் சமூக திட்டத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…

1 day ago

இந்த கோடையில் வீட்டில் வத்தல் தயாரிக்கிறீர்களா?

இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…

1 day ago

ஆர் கே மட சாலையில் இருந்த தற்காலிக பேருந்து நிறுத்தம் இடமாற்றம்.

ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…

1 day ago

கோடை காலத்திற்காக சித்திரகுளத்தில் தற்காலிக குடிநீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…

2 days ago

பேருந்து நிறுத்தங்களில் தங்குமிடங்களுக்கான பயணிகளின் வேண்டுகோளுக்கு சென்னை மெட்ரோ இறுதியாக பதிலளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…

2 days ago

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

3 days ago