மயிலாப்பூர்வாசிகளின் வாக்குப்பதிவு குறிப்புகள்; உங்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.

வெண்ணிலா டி.என்
குமாரராஜா பள்ளியில் வாக்களிக்க அதிக அளவிலான மூத்த குடிமக்கள் வந்திருந்தனர். இதுவரை இவ்வளவு மூத்தகுடிமக்களை வாக்களிக்கும் இடத்தில் பார்த்ததில்லை.

அஸ்வின் ஹரி
சில குழப்பங்களுக்குப் பிறகு மந்தைவெளியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் 7:30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அடையாள அட்டை ஆதாரம் இல்லாமல் வாக்களிக்க வந்த சில மூத்த குடிமக்கள் இருந்தனர். பூத் சீட்டுகள் தேவையில்லை என்ற செய்தியை தவறாக புரிந்து கொண்டு அடையாள அட்டை எடுக்காமல் வந்திருந்தனர்.

ஆதி வரகன்
(செயின்ட் அந்தோனி பள்ளியில்) ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி கவுண்டர்கள் இருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகே ஆண்களுக்கான ஓட்டு போடும் இயந்திரம் வேலை செய்யத் தொடங்கியது, ஆனால் பெண்களுக்கான ஓட்டுபோடும் இயந்திரம் நீண்ட நேரமாகியும் இயங்கவில்லை. என் அம்மா வாக்களிக்க நீண்ட நேரம் பிடித்தது.

பிரசன்னா ராமசாமி
நான் சரியாக காலை 7 மணிக்கு ராஜா முத்தையா பள்ளிக்கு வாக்களிக்க சென்றேன். 7.20 மணி வரை அவர்கள் ஏதோ தடுமாறிக் கொண்டிருந்தார்கள். சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னரே வாக்குப்பதிவை தொடங்கினர்.

(மயிலாப்பூர் டைம்ஸ் வாக்குப்பதிவு சம்பந்தமான உங்களது கருத்துக்களை இங்கே வெளியிடுவோம். நீங்களும் வாக்குப்பதிவு சம்பந்தமான கருத்துக்களை அனுப்பலாம்.)

admin

Recent Posts

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 days ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

1 week ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

1 week ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

3 weeks ago