மத நிகழ்வுகள்

ஒரு வருடம் கழித்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பிரதோஷ விழா.

கடந்த ஆண்டு இதே நேரத்தில், பிரதோஷ மாலையில், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் பிரகாரத்தை சுற்றிவருவதற்கு கொரோனா 2வது அலையை தொடர்ந்து நெறிமுறையின் ஒரு பகுதியாக, பக்தர்கள் பிரதோஷ ஊர்வலத்தை தரிசனம் செய்ய உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

பிரதோஷ மூர்த்தி கோவில் உள்ளே வாசலை கடந்து செல்லும் போது, ​​கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயில்களில் பக்தர்கள் நின்று தரிசனம் செய்ய முயன்றதாக மயிலாப்பூர் டைம்ஸில் செய்திகள்ஏற்கனெவே வெளியாகியுள்ளன.(https://www.mylaporetimes.com/2021/07/devotees-not-to-be-allowed-for-next-pradosham-at-sri-kapali-temple-safety-measure/). பக்தர்கள் நீண்ட நேரம் நின்று கோவிலுக்கு வெளியில் இருந்து ஓதுவாரின் பாராயணத்தை கேட்டனர்.

புதன்கிழமை (ஆகஸ்ட் 24, 2022) மாலை வாழ்க்கை நல்ல நாட்களுக்குத் திரும்பியதற்கான சாட்சி. சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நந்தி அபிேஷகத்தை தொடர்ந்து ஊர்வலத்தையும் தரிசனம் செய்தனர்.

ஊர்வலத்தின் மூன்று சுற்றுகளின் போது ஒவ்வொரு வேதங்களையும் வழங்கும் வெவ்வேறு குழுக்களுடன் வேத பாராயணமும் மற்றும் தேவாரம் பாடல்களை பாடும் குழுவும் இருந்தது.

அலங்கார மண்டபத்தின் முன் ஓதுவார் சத்குருநாதன் திருமந்திரம் முழங்க, பரம்பரை அர்ச்சகர் தீபாராதனை செய்தபோது ஏகமாக
பக்தர்களின் கூப்பிய கரங்கள் இருந்தது.

மூன்றாவது சுற்று ஊர்வலத்தில் மோகன் தாஸின் நாதஸ்வரத்திற்கு ஏற்ப ஸ்ரீபாதம் தங்கிகள் வொயாலி காட்சியை அளித்தனர்.

– செய்தி மற்றும் புகைப்படம் எஸ்.பிரபு

admin

Recent Posts

மந்தைவெளிபாக்கம் சமூகம் உள்ளூர் பிரச்சனைகளை தீர்க்க அப்பகுதியின் பிரதிநிதிகள் குழுவை உருவாக்கியுள்ளது.

மந்தைவெளிபாக்கம் சமூகம் உள்ளூர் பிரச்சனைகளை விவாதிக்க மற்றும் உள்ளூர் பகுதி அலுவலர்கள் / பொறியாளர்கள் மற்றும் அவர்களின் மூத்தவர்களுடன் பேச…

19 hours ago

பி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் 6 மற்றும் 9 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்.

மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு - தமிழ் மற்றும் ஆங்கில…

2 days ago

சாந்தோம் தேவாலயத்தில் பைபிள் பள்ளியின் இறுதிப் போட்டியில் குழந்தைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் ஆங்கில தேவாலயத்தில் நடைபெற்ற விடுமுறை பைபிள் பள்ளியின் இறுதிப் போட்டி, சனிக்கிழமை, மே…

2 days ago

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

மயிலாப்பூர் தெற்கு மாடத்தெரு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. மே 14ம் தேதி துவங்கி…

4 days ago

ஞாயிற்றுக்கிழமை ஐபாகோ ஐஸ்கிரீம் பார்லரில் மேளா

லஸ் சர்ச் சாலையில் உள்ள ஐபாகோ ஐஸ்கிரீம் பார்லர் (ஸ்டேட் வங்கி எதிரில், அம்ருததாஞ்சன்) மே 19 அன்று (மதியம்…

4 days ago

பரபரப்பான மயிலாப்பூர் தெருவில் சாக்கடை மேன்ஹோல் மூடியை சுற்றியிருந்த அரைகுறை வேலைகளை மாநகராட்சி ஊழியர்கள் சரிசெய்தனர்.

சமூக ஊடகங்களின் ரீச் மற்றும் மாநில சிவில் ஏஜென்சிகளில் காலப்போக்கில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்திற்கு நன்றி, கல்வி வாரு தெருவில் பழுதுபார்க்கப்பட்ட…

4 days ago