ஒரு வருடம் கழித்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பிரதோஷ விழா.

கடந்த ஆண்டு இதே நேரத்தில், பிரதோஷ மாலையில், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் பிரகாரத்தை சுற்றிவருவதற்கு கொரோனா 2வது அலையை தொடர்ந்து நெறிமுறையின் ஒரு பகுதியாக, பக்தர்கள் பிரதோஷ ஊர்வலத்தை தரிசனம் செய்ய உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

பிரதோஷ மூர்த்தி கோவில் உள்ளே வாசலை கடந்து செல்லும் போது, ​​கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயில்களில் பக்தர்கள் நின்று தரிசனம் செய்ய முயன்றதாக மயிலாப்பூர் டைம்ஸில் செய்திகள்ஏற்கனெவே வெளியாகியுள்ளன.(https://www.mylaporetimes.com/2021/07/devotees-not-to-be-allowed-for-next-pradosham-at-sri-kapali-temple-safety-measure/). பக்தர்கள் நீண்ட நேரம் நின்று கோவிலுக்கு வெளியில் இருந்து ஓதுவாரின் பாராயணத்தை கேட்டனர்.

புதன்கிழமை (ஆகஸ்ட் 24, 2022) மாலை வாழ்க்கை நல்ல நாட்களுக்குத் திரும்பியதற்கான சாட்சி. சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நந்தி அபிேஷகத்தை தொடர்ந்து ஊர்வலத்தையும் தரிசனம் செய்தனர்.

ஊர்வலத்தின் மூன்று சுற்றுகளின் போது ஒவ்வொரு வேதங்களையும் வழங்கும் வெவ்வேறு குழுக்களுடன் வேத பாராயணமும் மற்றும் தேவாரம் பாடல்களை பாடும் குழுவும் இருந்தது.

அலங்கார மண்டபத்தின் முன் ஓதுவார் சத்குருநாதன் திருமந்திரம் முழங்க, பரம்பரை அர்ச்சகர் தீபாராதனை செய்தபோது ஏகமாக
பக்தர்களின் கூப்பிய கரங்கள் இருந்தது.

மூன்றாவது சுற்று ஊர்வலத்தில் மோகன் தாஸின் நாதஸ்வரத்திற்கு ஏற்ப ஸ்ரீபாதம் தங்கிகள் வொயாலி காட்சியை அளித்தனர்.

– செய்தி மற்றும் புகைப்படம் எஸ்.பிரபு

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago