செய்திகள்

ஆர்.ஏ. புரம் அஞ்சல் அலுவலகம் ஆர்.கே. மட சாலையில் உள்ள புதிய முகவரிக்கு மாற்றம்.

ஆர்.ஏ. புரம் அஞ்சல் அலுவலகம், எம்.டி.சியின் மந்தைவெளி பேருந்து நிலையத்திற்கு அருகில் ஆர்.கே. மட சாலையின் முனையில் ஒரு காலத்தில் அமைந்திருந்தது, இப்போது ஆர்.கே. மட சாலையின் புதிய முகவரியில், மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகில் திறக்கப்பட்டுள்ளது.

இது தற்போது ‘தின தூது’ நாளிதழ் அலுவலகத்திற்கு எதிரே உள்ள புதிய வளாகத்தில் உள்ளது.

இங்கு ஜனவரி 24 ம் தேதி காலை முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் திவ்யா இந்த அலுவலகத்தை திறந்து வைத்து பதவியேற்றுக் கொண்டார்.

பொது-அஞ்சல் தபால் தலைகள் விற்பனை, ஸ்பீட் போஸ்ட் மற்றும் பார்சல் போஸ்ட் முன்பதிவுகள், தபால் அலுவலக சேமிப்பு மற்றும் மீதமுள்ள அனைத்து சேவை கவுண்டர்கள் தரை தளத்தில் அமைந்துள்ளன. முதல் தளம் அஞ்சல்களை சேகரிப்பதற்கும் வரிசைப்படுத்துவதற்கும், தபால்காரர்கள் மற்றும் பிறரின் கடமைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

அஞ்சல் அலுவலகம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும், வார இறுதியில் சில சேவைகள் குறைக்கப்படும்.

முந்தைய முகவரியில் வழங்கப்பட்ட அனைத்து சேவைகளும் இங்கு தொடர்கின்றன என்று ஒரு அலுவலக ஊழியர் கூறினார்.

“பழைய வளாகம் மிகவும் பழையதாகிவிட்டது, மழையின் போது நாங்கள் வெள்ளப் பிரச்சினைகளை எதிர்கொண்டோம்,” என்றும் “இது காற்றோட்டமானது மற்றும் புதியது, மக்களுக்கும் ஊழியர்களுக்கும் நல்லது.” என்று ஊழியர் ஒருவர் கூறினார்.

முகவரி : 121, ஆர்.கே.மட் ரோடு.தொலைபேசி இணைப்பு இன்னும் இங்கு மாற்றப்படவில்லை.

admin

Recent Posts

ஆர்.ஏ.புரம் சமூக திட்டத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…

8 hours ago

இந்த கோடையில் வீட்டில் வத்தல் தயாரிக்கிறீர்களா?

இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…

8 hours ago

ஆர் கே மட சாலையில் இருந்த தற்காலிக பேருந்து நிறுத்தம் இடமாற்றம்.

ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…

9 hours ago

கோடை காலத்திற்காக சித்திரகுளத்தில் தற்காலிக குடிநீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…

1 day ago

பேருந்து நிறுத்தங்களில் தங்குமிடங்களுக்கான பயணிகளின் வேண்டுகோளுக்கு சென்னை மெட்ரோ இறுதியாக பதிலளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…

1 day ago

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

2 days ago