Categories: சமூகம்

மயிலாப்பூரில் பழைய குடியிருப்புகளை மீண்டும் புதிதாக உருவாக்கி, குடியிருப்பாளர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் குடியிருப்புகளை வழங்குவது பெரும் சவாலாக உள்ளது

அரசால் கட்டப்பட்ட குடியிருப்புகளின் வளாகங்களில் வசிக்கும் 50 சதவீதத்திற்க்கும் அதிகமானோர், இந்த வளாகங்களில் உள்ள பாதைகள் மற்றும் இடங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகளை அமைத்து குடியிருந்துவந்தனர். தற்போது இவர்களுக்கு வீடுகள் வழங்குவது பெரும் சவாலான காரியமாக உள்ளது?.

மயிலாப்பூரில் பல திட்டங்களில் பணிபுரியும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூத்த அதிகாரிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகும் இது. மேலும் அதிகாரிகள் இது சம்பந்தமாக உள்ளூர் எம்.எல்.ஏ விடம் சில சமாதான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாப்பூர் தொகுதியில் சுமார் 24 குடியிருப்பு வளாகங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது, அதில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் ஏழைகளுக்கு சிறிய வீடுகளை உருவாக்கியது.

ஏறக்குறைய அனைத்து குடியிருப்புகளும் பழுதடைந்து வருகின்றன; சில இடங்களில், கூரைகள் அல்லது ஜன்னல்கள் இடிந்து விழுந்துள்ளன.

குடியிருப்பாளர்கள் பெரும்பாலும் வீட்டின் உட்புறங்களை மட்டுமே சரிசெய்கின்றனர். இப்போதுதான் இதுபோன்ற பராமரிப்பு பணிகளை கையாள, குடியிருப்பாளர்கள் நலச் சங்கங்களை அமைப்பதற்கான வழிமுறையை உருவாக்கியுள்ளனர்.

சில வளாகங்களில், மெரினா குப்பம் பகுதியில், மறுவடிவமைப்பு பணிகள் சீராக உள்ளன. டூமிங்குப்பத்தில் வசிக்கும் 200 பேரில் 70சதவீதம் பேர் சமீபத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறியதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ.தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டமாக சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 214 குடியிருப்புகள் ஒதுக்கப்பட உள்ளது. “அவர்களின் ஆவணங்களை சரிபார்த்து அவர்களுக்கு வீடுகளை ஒதுக்க சிறிது காலங்கள் ஆகும்.

ராஜீவ்காந்தி குப்பம் மற்றும் சீனிவாசபுரத்தில் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இங்குள்ள சட்டப்பூர்வ குடியிருப்பாளர்களைக் காட்டிலும் அதிகமான குடிசைகள் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதை எங்களால் பார்க்க முடிகிறது, மேலும் அனைவருக்கும் வீடு கட்டித் தருவதாக நாங்கள் உறுதியளித்துள்ளதால், அவர்களுக்கு இடமளிப்பது இப்போது சவாலாக உள்ளது.

அனைவருக்கும் இடமளிக்கும் வகையில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட நிலப்பரப்பில் உயரமான குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும். ஒவ்வொரு தளத்திலும் 3/4 லிஃப்ட்கள் இருக்கும் வகையில் 10/12 மாடிகள் இருக்கலாம். சில குடியிருப்பாளர்கள் இந்த திட்டத்தை எதிர்த்துள்ளனர், லிஃப்ட் செயலிழந்தால் அல்லது மின்சார பழுது ஏற்பட்டால் குடியிருப்பாளர்கள் கீழே இறங்குவதற்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படும்.

அனைவருக்கும் இடமளிக்கும் வாரியத்தின் திட்டங்களை குடியிருப்பாளர்களுக்குக் காட்டுகிறோம், அவர்களுக்கு ஆட்சேபனை இருந்தால், அவர்கள் சார்பில் சமூக தலைவர்கள் எங்களிடம் விவாதித்து முடிவெடுக்கலாம். இது தவிர வேறு வழியில்லை. இதனால் கபாலி தோட்டம் போன்ற பல இடங்களில் பணி தாமதமானது. என்று எம்.எல்.ஏ தா.வேலு கூறுகிறார்

விசாலாட்சி தோட்டம், வன்னியம்பதி தோட்டம், வள்ளீஸ்வரன் தோட்டம் ஆகிய இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆர்.ஏ.புரத்தில் ஒரு பிளாட் ஒதுக்கப்பட்ட குடியிருப்பாளர் ஒருவர் கூறுகையில், தற்போது நல்ல நிலையில் நடைபெற்று வந்த பணி கொரோனா காரணமாக தற்போது பணிகள் மந்தகதியில் உள்ளது.

குயில் தோட்டத்தில், சாந்தோம் ஹைரோட்டில் உள்ள மக்கள் எங்கள் முன்மொழிவுகளை ஏற்று தங்கள் இடத்தை காலி செய்யத் தொடங்கியுள்ளனர் என்று எம்எல்ஏ கூறுகிறார்.

பல்லக்குமாணியம் நகர், பிள்ளையார்கோயில் தோட்டம், சத்தியவாணி முத்து நகர், நாட்டான் தோட்டம், பள்ளிவாசல் தெரு, குப்பைமேடு, ஆதிமான் தோட்டம் ஆகிய பகுதிகளிலும் திட்டப்பணிகள் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன.

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

3 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago