செய்திகள்

முழு ஊரடங்கு : ஞாயிற்றுக்கிழமை காலியாக இருந்த சாலைகள், சாலைகளில் சுதந்திரமாக சுற்றி திரியும் கால்நடைகள்.

கொரோனா தொற்று விதிமுறைகள் காரணமாக மாநிலம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 23) மயிலாப்பூரில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் அனைத்தும் அமைதியாக காணப்பட்டது.

உள் தெருக்களில் கூட வாகன ஓட்டிகள் யாரும் இல்லை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் தேவையில்லாமல் வெளியே சுற்றி திரியும் நபர்களுக்கு அபராதம் விதிக்க காவல்துறைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நிச்சயமாக, மயிலாப்பூர் போன்ற ஒரு இடத்தில் கால்நடைகள் எல்லா நாட்களிலும் எப்பொழுதும் செய்வது போல் அவிழ்த்து விடப்பட்டன, மேலும் மந்தவெளி தெரு போன்ற மார்க்கெட் உள்ள பகுதிகளை சுற்றி தங்களுக்கான உணவை தேடித் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன.

தெரு நாய்களும் மெரினா லூப் சாலையில் வேடிக்கை பார்த்தன, அனைத்து மீன் கடைகளும் மூடப்பட்டிருந்ததால் இந்தக் குப்பங்களில் உள்ள இளைஞர்கள் காலை நேரத்தில் தெருவில் கிரிக்கெட் விளையாட்டை விளையாடினர்.

காந்தி சிலைக்கு அருகில் உள்ள காமராஜர் சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் குடியரசு தின அணிவகுப்புக்கான கேலரிகள் அமைக்க பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.

நேற்று, இறைச்சி மற்றும் மளிகைக் கடைகளில், ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் சாப்பாட்டிற்காக மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.

admin

Recent Posts

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

17 hours ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

17 hours ago

மாதவப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவோணப் பெருவிழா – ஏப்ரல் 30 முதல் மே 10 வரை.

மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…

1 day ago

பி.எஸ்.மெட்ரிக் பள்ளியில் (வடக்கு) இந்த கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பில் வணிகவியல் பாடம் அறிமுகம்.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…

2 days ago

விவேகானந்தா கல்லூரியின் (1968 – ’71) பி.ஏ. பொருளாதாரம் பிரிவு முன்னாள் மாணவர்கள் மே 1 அன்று சந்திப்பு

விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…

3 days ago

இந்த மந்தைவெளி குடியிருப்பாளர் இரயில் பயணத்தின் போது ‘காணவில்லை’

மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…

3 days ago