செய்திகள்

ஆர். கே நகரில் வசிக்கும் மக்கள் தங்களுடைய வீதிகளை அழகுபடுத்தும் பணிகளை சிறப்பாக செய்துவருகின்றனர்.

ஆர்.ஏ.புரம் பகுதி ராமகிருஷ்ணா நகரில் திருவீதி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மக்கள் இரண்டு வருடங்களாக அவர்களுடைய தெருவை மிகவும் அழகாக மாற்றியுள்ளனர். அவர்களுடைய தெருவில் மரங்களை நட்டும், சுவர்களில் அழகான ஓவியங்களை வரைந்தும், இங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் மட்டும் தெருவில் ஒரு பக்கத்தில் வாகனங்களை நிறுத்தும் வகையிலும் சில விதிமுறைகளை பின்பற்றுகின்றனர்.

இது தவிர வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தனியாக சேகரித்து உள்ளூர் பூங்கா அருகே இருக்கும் ஒரு குப்பை தொட்டியில் சேகரிக்கின்றனர். இதை ஏஜென்ட் ஒருவர் எடுத்துச்செல்கிறார். இங்கு வசிக்கும் மக்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை உர்பேசர் ஊழியர்களிடம் நேரடியாக கொடுக்கின்றனர். ஆகவே இந்த தெருக்களில் குப்பைகளை பார்க்கமுடியாது. இப்போது இந்த ராமகிருஷ்ணா நகரில் பத்து தெருக்களில் வசிக்கும் சுமார் ஐந்நூறு குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு முதல் மற்றும் இரண்டாவது தெருவிலும் மக்கள் தெருக்களில் மரம் நடுதல் மற்றும் இதர அழகுபடுத்தும் வேலைகளை செய்கின்றனர். இது மற்ற பகுதி மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

admin

Recent Posts

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

5 hours ago

இளைஞர்களுக்கான புகைப்பட பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதை மயிலாப்பூர் எம்எல்ஏ துவக்கி வைக்கிறார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…

1 day ago

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

3 days ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

3 days ago

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

4 days ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

4 days ago