ஆர்.ஏ.புரம் பகுதி ராமகிருஷ்ணா நகரில் திருவீதி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மக்கள் இரண்டு வருடங்களாக அவர்களுடைய தெருவை மிகவும் அழகாக மாற்றியுள்ளனர். அவர்களுடைய தெருவில் மரங்களை நட்டும், சுவர்களில் அழகான ஓவியங்களை வரைந்தும், இங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் மட்டும் தெருவில் ஒரு பக்கத்தில் வாகனங்களை நிறுத்தும் வகையிலும் சில விதிமுறைகளை பின்பற்றுகின்றனர்.
இது தவிர வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தனியாக சேகரித்து உள்ளூர் பூங்கா அருகே இருக்கும் ஒரு குப்பை தொட்டியில் சேகரிக்கின்றனர். இதை ஏஜென்ட் ஒருவர் எடுத்துச்செல்கிறார். இங்கு வசிக்கும் மக்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை உர்பேசர் ஊழியர்களிடம் நேரடியாக கொடுக்கின்றனர். ஆகவே இந்த தெருக்களில் குப்பைகளை பார்க்கமுடியாது. இப்போது இந்த ராமகிருஷ்ணா நகரில் பத்து தெருக்களில் வசிக்கும் சுமார் ஐந்நூறு குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு முதல் மற்றும் இரண்டாவது தெருவிலும் மக்கள் தெருக்களில் மரம் நடுதல் மற்றும் இதர அழகுபடுத்தும் வேலைகளை செய்கின்றனர். இது மற்ற பகுதி மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…