செய்திகள்

மயிலாப்பூர் பகுதிகளில் சிறிய அளவிலும், சுறுசுறுப்பாகவும் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வுகள்

குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் எது வந்தாலும் அதைக் கொண்டாடும் ஒரு சில குழுக்கள் உள்ளன.

தொற்றுநோய் பரவி வரும் சூழலில் கூட்டங்கள் கூட தடைவிதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மயிலாப்பூரில் பல்வேறு குழுக்களால் நடத்தப்பட்ட இன்றைய குடியரசு தின நிகழ்வுகள் எளிமையாகவும் சிறியதாகவும் இருந்தது.

எப்போதும் போல, செயின்ட் இசபெல் மருத்துவமனை வளாகத்தில், செவிலியர் பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சி வண்ணமயமாக இருந்தது – வளாகத் தளத்தில் இந்தியாவைக் கருப்பொருளாகக் கொண்ட ஒரு பெரிய ரங்கோலி கோலம் வடிவமைத்திருந்தனர், மேலும் மூவர்ணக் கொடியின் கலரில் உடைகளை அணிந்திருந்தனர்.

பாரதிய வித்யா பவனில், கிழக்கு மாட தெருவில் பாடகர் மாஸ்டர் சுதா ராஜா தலைமையில், இங்கு ஏற்றப்பட்ட கொடியின் கீழ், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய சிறு குழுவினரின், பாடல் பாடும் நிகழ்ச்சி நடந்தது.

அருகாமையில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவின் குழுவினர் கொடியேற்றும் நிகழ்வை சாதாரணமாக நடத்தினார்கள். லேடி சிவசாமி ஐயர் பெண்கள் பள்ளியில் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து கொடிக்கம்பத்தைச் சுற்றி பூக்கள் மற்றும் கலர் பொடிகளால் பெரிய ரங்கோலியை வடிவமைத்திருந்தனர்.

மந்தைவெளிப்பாக்கம் குடியிருப்பாளர்களின் ஒரு சிறிய குழு கல்யாண் நகர் அஸோசியேஷன், இவர்கள் எப்போதும் போல் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றினர், ஜெத் நகர், ஆர்.ஏ. புரத்தில், உள்ளூர் சமூகத் தலைவர்கள், அந்தப் பகுதியில் கழிவுகளை அகற்றும் உர்பேசர் சுமீத்தின் ஊழியர்களை தங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரவழைத்து அவர்களை கௌரவித்தனர்.

admin

Recent Posts

குழந்தைகளுக்கான பாரதிய வித்யா பவனின் இரண்டாவது பட்டறைகள். மே 20 முதல்

மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை வழங்குகிறது. திட்டமிடப்பட்ட திட்டங்கள்…

9 hours ago

கல்வி வாரு தெருவில் இந்த அரைகுறை சாக்கடை மேன்ஹோல் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

கல்வி வாரு தெரு, வித்யா மந்திர் பள்ளி வாசலை ஒட்டிய தெரு, பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய தெரு போன்ற இடங்களில்…

17 hours ago

அடையாறு ஆற்றில் நீர்தாமரைகள்: படகு கிளப்பில் படகோட்டிகள் ஏமாற்றம்.

படகு கிளப்பின் கரையை சுற்றியுள்ள அடையாறு ஆற்றில் உள்ள நீர்தாமரைகள் மற்றும் செடிகள் படர்ந்துள்ளன. இது கிளப்பில் படகோட்டுபவர்களை விரக்தியில்…

19 hours ago

கற்பகம் அவென்யூ பூங்காவில் நாய்க்குட்டிகள் காணப்படுகின்றன. அவர்களை யாராவது தத்தெடுக்கலாம்.

ஆர்.ஏ.புரத்தின் கற்பகம் அவென்யூ மண்டலத்தில் உள்ள ஜி.சி.சி பூங்காவில் ஒன்றிரண்டு நாய்க்குட்டிகள் காணப்பட்டன. மூன்று நாட்களுக்கு முன்பு பூங்காவிற்குச் சென்ற…

19 hours ago

மயிலாப்பூர் ஆர்.கே.மட சாலையில் நேச்சுரல் சலூன் திறப்பு.

ஸ்பா தெரபி முதல் ஹேர் ஸ்டைலிங் சேவைகள் வரை, இந்த நன்கு வடிவமைக்கப்பட்ட சலூன் அனைத்தையும் வழங்குகிறது. இதன் உரிமையாளர்…

2 days ago

ஆழ்வார்பேட்டை ரவுண்டானாவில் புதிய காபி மற்றும் சிற்றுண்டி கடை

மெட்ராஸ் காபி ஹவுஸ் முசிறி சுப்ரமணியம் சாலையில் (ஒரு காலத்தில் ஆலிவர் சாலை என்று அழைக்கப்பட்டது) ஆழ்வார்பேட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர்…

3 days ago