ஆர்.ஏ.புரம் அஞ்சலகம் இயங்கி வந்த கட்டிடத்தை தற்போது செட்டிநாடு குழுமத்தின் உரிமையாளர் பயன்படுத்தி வருகிறார்.
இங்கு செட்டிநாடு நகர்ப்புற சுகாதார மையம் செயல்பட உள்ளதாக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு பொது மருத்துவத்தில் எம்.டி., பட்டம் பெற்ற டாக்டர் ஒருவர் இங்கு மருத்துவம் பார்க்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சாதாரண நோய்களுக்கான மருத்துவ ஆலோசனை இங்கு வழங்கப்படும். பெரிய பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு செட்டிநாடு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படும்.
இங்கு மருத்துவ வசதிகளை முழுமையாக நிறைவு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த இடம் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மந்தைவெளி பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ளது.
செய்தி மற்றும் புகைப்படம்; சி.ஆர்.பாலாஜி
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…