மார்கழி இசை விழா நடைபெற்று வரும் இந்த நேரத்தில் சில சபாக்களில் மட்டுமே கேண்டீன் திறக்கப்பட்டுள்ளது. நமது மயிலாப்பூர் பகுதியில் இரண்டு சபாக்களில் கேண்டீன் திறக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் முசிறி சுப்பிரமணியம் சாலையில் உள்ள மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் சாஸ்தா கேட்டரிங் கேண்டீன் திறந்துள்ளனர். இங்கு தினமும் 12 மணிமுதல் இலை சாப்பாடு கிடைக்கிறது. இவர்களுடைய உணவுக்கு இசை ரசிகர்களிடையே வரவேற்பு அதிகம்.
வார நாட்களில் கூட இங்கு சாப்பிட வரும் மக்கள் கூட்டம் அதிகம். இலை சாப்பாட்டின் விலை ரூ.400. மேலும் இவர்கள் வருடா வருடம் ஜனவரி மாதம் மற்றும் இரண்டாம் தேதிகளில் கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் முப்பது வகையான உணவுவகைகளை, புது வருட ஸ்பெஷல்லாக கொடுக்கின்றனர். இது சுமார் ரூ. 500 வரை விற்கப்படுகிறது. இங்கு கேண்டீன் காலை முதல் இரவு வரை செயல்படுகிறது. காலை சிற்றுண்டி, டிபன், ஸ்வீட்ஸ் போன்றவை கிடைக்கிறது.
இதே போன்று ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள நாரதகான சபாவின் பின்புறத்தில் சாஸ்தாலயா கேட்டரிங், கேண்டீன் திறந்துள்ளனர், ரமேஷ் கிருஷ்ணன் இந்த கேட்டரிங் சர்வீஸை நடத்திவருகிறார். இங்கும் இலை சாப்பாடு வழங்கப்படுகிறது. விலை ரூ.350. ஜனவரி 5ம் தேதி வரை கேண்டீன் இயங்கும்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…