ஞாயிற்றுக்கிழமைகளில் பிற மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையடுத்து, தமிழ்நாட்டிலும் இன்று மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து மயிலாப்பூரில் சாலைகள் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
விடியற்காலையில் இருந்து, செய்தித்தாள்கள், பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குபவர்கள் அல்லது அரசு அனுமதித்த பணியில் இருப்பவர்கள் தவிர வாகனங்கள் எதுவும் சாலைகளில் செல்லவில்லை.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இரவுகளைப் போலல்லாமல், மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் இன்று காலை எந்த போலீஸ் அவுட்போஸ்ட்களும் காணப்படவில்லை.
வியாபாரிகள் கூட தங்கள் வியாபாரத்தை நிறுத்தியதால், தெற்கு மாட வீதி, மந்தைவெளி தெரு போன்ற இடங்கள், பேய் மண்டலம் போல் இருந்தது. டி.டி.கே சாலை, டாக்டர். ஆர்.கே. சாலை மற்றும் ஆர்.கே. மட சாலைகளும் அமைதியாக காணப்பட்டது.
தனிநபர்கள் உள்ளூர் கோயில்களின் வாயில்கள் வரை நடந்து சென்று, பிரார்த்தனை செய்துவிட்டு அங்கிருந்து நகரந்தனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் பிரார்த்தனைகள், சிறப்பு திருப்பலி என்று பிஸியாக இருக்கும் தேவாலய பகுதிகளில், சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் மிகவும் அமைதியாக இருந்தது, சில தேவாலயங்களில் சேவைகள் அனைத்தும் வெப்காஸ்ட் செய்யப்பட்டு விசுவாசிகள் வீட்டிலேயே இருக்க தேவாலய நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…