மீன் உணவு ஆர்வலர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் மூடப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, நேற்று மாலை தங்களுக்குப் பிடித்தமான மீன் வாங்குவதற்கு சாந்தோமில் உள்ள மெரினா லூப் சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டில் குவிந்தனர்.
மாலை 5 மணி முதல் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த லூப் சாலையில் மீன் வாங்க வாகனங்களை ஓட்டிச் சென்றனர், சிறிய கடைகளில் சிலர் பேரம் பேசி மீன்களை வாங்கி சென்றனர்.
மீன் வியாபாரிகள் விலை வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாக ஒப்புக்கொண்டனர். கொரோனா தொற்று நேர விதிமுறைகள் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை கடைகள் மூடப்படுவதால் அந்த வியாபாரத்தை ஈடுகட்ட இந்த விலை தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மெரினா லூப் சாலையில் இருக்கும் திறந்தவெளி மீன் மார்க்கெட்டில் பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு உள்ளன. மேலும் கடல் அருகே இருப்பதால் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் நேரடியாக விற்பனைக்கு வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து தினமும் மீன்களை வாங்கி செல்கின்றனர்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…