Categories: சமூகம்

தெப்போற்சவ விழாவில் பணியாற்றுவது உடற்பயிற்சி செய்வது போன்று உள்ளது: காவல் ஆய்வாளர்

எம்.ரவி, காவல் ஆய்வாளர், மயிலாப்பூர். தனது உடற்தகுதியைப் பற்றி குறிப்பிடும் இவர், உடற்பயிற்சிகாக்க தினசரி கடுமையான அட்டவணையைக் பின்பற்றுகிறார். ஆதி கேசவப் பெருமாள் கோயிலில் தெப்போற்சவ விழா துவங்கியதும், அங்குள்ள இரண்டு மணி நேர வேலைகளை உடற்பயிற்சிகாக்க பயன்படுத்த முடிவு செய்தார்.

தினமும் மாலையில், நடைபெற்றுவரும் ஆதிகேசவப் பெருமாள் கோவிலின் தெப்பத்திருவிழாவின் போது சுவாமிகள் குளத்தில் தெப்பத்தில் உலா வரும்போது, இவர் சித்திரகுளத்தின் நான்கு குளக்கரை வீதிகளை இரவு 7 மணி முதல் 9 மணி வரை வலம் வருகிறார்.

இந்த வாரம் தனது நடைப்பயணம் இரட்டை நோக்கத்திற்கு உதவுகிறது என்றும், இரண்டு மணிநேரம் ஒரே இடத்தில் நிற்பதற்குப் பதிலாக, நான்கு தெருக்களைச் சுற்றி நடப்பது எனது தினசரி உடற்பயிற்சிக்கு உதவுகிறது. மேலும், தெப்பத்தின் போது ‘பந்தோபஸ்த்’ ஒழுங்காக இருப்பதையும் உறுதி செய்கிறேன்” என்கிறார் காவல் ஆய்வாளர் ரவி.

ஒவ்வொரு தெருவிலும் பாதுகாப்பு பணிக்காக சிறிய அளவில் காவலர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் இன்ஸ்பெக்டர் ரவி குளத்தை சுற்றி வந்ததால், அந்தந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட காவலர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர்.

செய்தி மற்றும் புகைப்படம்: எஸ்.பிரபு

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago