ஆர்.ஏ.புரத்தில் உள்ள மாதா சர்ச் சாலையில் அமைந்துள்ள செயின்ட் லாசரஸ் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு பகுதி மாணவர்களுக்கு பிப்ரவரி 1 அன்று பள்ளி திறக்கப்பட்டவுடன் புதிய பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டன.
மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளையின் நன்கொடையின் மூலம் இது ஓரளவு சாத்தியமானது. இந்த நன்கொடை புதிய கல்வியாண்டு தொடங்கும் போது வழங்கப்படும் வருடாந்திர நன்கொடையாகும், ஆனால் இந்த ஆண்டு கொரோனா சூழ்நிலையின் காரணமாக சீருடை தைத்து மாணவர்களுக்கு வழங்குவது தாமதமானது.
இந்த பள்ளியில் படிக்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு சீருடை வழங்கப்படுகிறது.
மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளைக்கு நிதியுதவி மயிலாப்பூர் டைம்ஸிடமிருந்தும் மற்றும் மயிலாப்பூர்வாசிகளிடமிருந்தும் பெறப்படுகின்றது. இந்தப் பள்ளிக்கு உதவிகள் செய்வது தவிர்த்து, இதர மயிலாப்பூர் பள்ளிகளில் படிப்பில் சிறந்து விளங்கும் 20 ஏழை மாணவர்களுக்கு அவர்களின் உயர்கல்வி படிப்புக்கு ஆண்டுதோறும் ரூ.2 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.
கடந்த 2021ம் ஆண்டிற்கான உதவித்தொகை, கடந்த ஆண்டு ஆகஸ்ட்/செப்டம்பரில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
நீங்கள் மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளைக்கு நிதியுதவி அளிக்க விரும்பினால் ஆன்லைன் வழியாக அளிக்கலாம். நீங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வரி விளக்கு உண்டு. மேலும் விவரங்களுக்கு மயிலாப்பூர் டைம்ஸ் சாந்தியை 044 -24982244 தொலைபேசி எண்ணை அழைக்கவும்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…