மயிலாப்பூர் பகுதியில் இரவுநேர ரோந்துப்பணிக்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் நியமனம்.

மாநகர் முழுவதும் காவல் துறையினர் இரவு ரோந்துப்பணியை கண்டிப்புடன் செய்ய வேண்டும் என்று புதிய கமிஷனர் ஆணையிட்டுள்ளார். இதன் காரணமாக மயிலாப்பூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு இந்த இரவு நேர ரோந்து பணிக்கான கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. இரவு ரோந்துப்பணியின் முக்கிய நோக்கம் என்னவெனில் போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவரை கண்டுபிடிப்பது, திருட்டு சம்பவங்கள், குற்றச்சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பது போன்றவையாகும்.

மயிலாப்பூர் பகுதியில் காவல்துறை அதிகாரி விஜயலட்சுமி, இரவு 11 மணி முதல் 6 மணிவரை இரவு ரோந்து பணியை மேற்கொள்ளவுள்ளார். இவரது தொலைபேசி எண் : 9498174421.
மேலும் காவல் உதவி ஆணையர் நடராஜன் இரவு நேர போக்குவரத்து சம்பந்தமான பிரச்சனைகளை கையாள உள்ளார் இவரது தொலைபேசி எண் : 9444050423. இவர்கள் தவிர்த்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சன் இரவு நேர ரோந்து பணியை மேற்கொள்ளவுள்ளார் தொலைபேசி எண் : 9444755485 . பொதுமக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் நடந்தால் மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

4 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago