செய்திகள்

மயிலாப்பூர் பகுதியில் இரவுநேர ரோந்துப்பணிக்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் நியமனம்.

மாநகர் முழுவதும் காவல் துறையினர் இரவு ரோந்துப்பணியை கண்டிப்புடன் செய்ய வேண்டும் என்று புதிய கமிஷனர் ஆணையிட்டுள்ளார். இதன் காரணமாக மயிலாப்பூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு இந்த இரவு நேர ரோந்து பணிக்கான கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. இரவு ரோந்துப்பணியின் முக்கிய நோக்கம் என்னவெனில் போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவரை கண்டுபிடிப்பது, திருட்டு சம்பவங்கள், குற்றச்சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பது போன்றவையாகும்.

மயிலாப்பூர் பகுதியில் காவல்துறை அதிகாரி விஜயலட்சுமி, இரவு 11 மணி முதல் 6 மணிவரை இரவு ரோந்து பணியை மேற்கொள்ளவுள்ளார். இவரது தொலைபேசி எண் : 9498174421.
மேலும் காவல் உதவி ஆணையர் நடராஜன் இரவு நேர போக்குவரத்து சம்பந்தமான பிரச்சனைகளை கையாள உள்ளார் இவரது தொலைபேசி எண் : 9444050423. இவர்கள் தவிர்த்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சன் இரவு நேர ரோந்து பணியை மேற்கொள்ளவுள்ளார் தொலைபேசி எண் : 9444755485 . பொதுமக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் நடந்தால் மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

admin

Recent Posts

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

1 day ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

2 days ago

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

3 days ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

3 days ago

மாதவப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவோணப் பெருவிழா – ஏப்ரல் 30 முதல் மே 10 வரை.

மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…

3 days ago

பி.எஸ்.மெட்ரிக் பள்ளியில் (வடக்கு) இந்த கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பில் வணிகவியல் பாடம் அறிமுகம்.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…

3 days ago