மயிலாப்பூர் பகுதியில் இரவுநேர ரோந்துப்பணிக்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் நியமனம்.

மாநகர் முழுவதும் காவல் துறையினர் இரவு ரோந்துப்பணியை கண்டிப்புடன் செய்ய வேண்டும் என்று புதிய கமிஷனர் ஆணையிட்டுள்ளார். இதன் காரணமாக மயிலாப்பூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு இந்த இரவு நேர ரோந்து பணிக்கான கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. இரவு ரோந்துப்பணியின் முக்கிய நோக்கம் என்னவெனில் போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவரை கண்டுபிடிப்பது, திருட்டு சம்பவங்கள், குற்றச்சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பது போன்றவையாகும்.

மயிலாப்பூர் பகுதியில் காவல்துறை அதிகாரி விஜயலட்சுமி, இரவு 11 மணி முதல் 6 மணிவரை இரவு ரோந்து பணியை மேற்கொள்ளவுள்ளார். இவரது தொலைபேசி எண் : 9498174421.
மேலும் காவல் உதவி ஆணையர் நடராஜன் இரவு நேர போக்குவரத்து சம்பந்தமான பிரச்சனைகளை கையாள உள்ளார் இவரது தொலைபேசி எண் : 9444050423. இவர்கள் தவிர்த்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சன் இரவு நேர ரோந்து பணியை மேற்கொள்ளவுள்ளார் தொலைபேசி எண் : 9444755485 . பொதுமக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் நடந்தால் மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago