மத நிகழ்வுகள்

ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் அந்தமான் தீவின் கத்தோலிக்க பேராலயங்களின் தலைவராக தேர்வு.

மயிலாப்பூர் ராஜா அண்ணாமலைபுரத்தில் பிறந்து வளர்ந்த, கத்தோலிக்க பாதிரியார் விசுவாசம் செல்வராஜ், அடுத்த மாதம் அந்தமான் நிக்கோபர் தீவில் உள்ள தேவாலயங்களுக்கு தலைவராக பதவியேற்கவுள்ளார். இவருக்கு வயது 55. போப் ஆண்டவர் இவரை சமீபத்தில் அந்தமான் தீவின் கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவராக தேர்ந்தெடுத்தார். பதவியேற்பு விழா ஆகஸ்ட் 21ம் தேதி அந்தமான் தீவின் தலைநகர் போர்ட்பிளேயரில் நடக்க உள்ளது. பாதிரியார் விசுவாசம் செல்வராஜ் அவர்கள் ஆந்திர மகிள சபாவின் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் பிறந்தார். பாதிரியாரின் குடும்பம் கிரீன் வேஸ் சாலையில் வசித்து வந்தனர். இவரது குடும்பத்தினர் அவல் வியாபாரம் செய்யும் தொழிலை செய்து வந்தனர். தற்போதுகூட பாதிரியாரின் சகோதரர் பாஸ்கர் மந்தைவெளியில் தேவநாதன் தெருவில் அவல் மற்றும் அதனுடன் சேர்ந்து வேரு சில பொருட்களையும் மொத்தவியாபாரம் செய்து வருகிறார்.

பாதிரியார் செல்வராஜ் தனது பள்ளிப்படிப்பை ராஜா முத்தையா பள்ளியிலும் பின்னர் சாந்தோம் மேல்நிலைப்பள்ளியிலும் பின்னர் பாதிரியார் படிப்பில் சேர்ந்து படித்ததாக தெரிவிக்கிறார். மேலும் பாதிரியார் படிப்பை முடிக்கும்போது அந்தமான் பகுதிக்கு பாதிரியார் தேவை இருப்பதாகவும் தெரிவித்தனர் அப்போது அவர் அந்தமானுக்கு சென்று சேவை செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். அன்று முதல் பாதிரியார் செல்வராஜ் பல்வேறு பதவிகளில் இருந்துவந்துள்ளார். பிஷப் குழுவிலும் பணியாற்றி வந்துள்ளார். ஆகவே தற்போது ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் அந்தமான் தீவில் உள்ள கத்தோலிக்க பேராலயங்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

admin

Recent Posts

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

8 hours ago

இளைஞர்களுக்கான புகைப்பட பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதை மயிலாப்பூர் எம்எல்ஏ துவக்கி வைக்கிறார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…

1 day ago

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

3 days ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

3 days ago

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

4 days ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

4 days ago