மயிலாப்பூர் விருபாட்சீஸ்வரர் கோவிலில் குளம் ஒன்று உள்ளது. கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்தாலும் இந்த குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் காணப்படுகிறது. ஏனென்றால் கோவில் அருகில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஆழ்துளை கிணறுகள் உள்ளது. அதிக நேரம் மக்கள் ஆழ்துளை கிணறுகளில் மின் மோட்டரை பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சுவதால் குளத்தின் அடிப்பகுதியில் உள்ள தண்ணீர் உடனடியாக உறிஞ்சப்படுகிறது. சில வருடங்களுக்கு முன் தெருக்களில் ஆங்காங்கே குழாய்கள் அமைது அந்த குழாய்களை ஒருங்கிணைத்து குளத்தின் அடிப்பகுதிக்கு மழை நீர் சென்று சேரும் விதத்தில் ஒரு கட்டமைப்பை அமைத்தனர். அவ்வாறு மழை நீர் குளத்தில் சென்று சேர்ந்தாலும் சுமார் ஒரு மணி நேரத்தில் நீர் உறிஞ்சப்படுகிறது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…