மயிலாப்பூர் விருபாட்சீஸ்வரர் கோவிலில் குளம் ஒன்று உள்ளது. கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்தாலும் இந்த குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் காணப்படுகிறது. ஏனென்றால் கோவில் அருகில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஆழ்துளை கிணறுகள் உள்ளது. அதிக நேரம் மக்கள் ஆழ்துளை கிணறுகளில் மின் மோட்டரை பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சுவதால் குளத்தின் அடிப்பகுதியில் உள்ள தண்ணீர் உடனடியாக உறிஞ்சப்படுகிறது. சில வருடங்களுக்கு முன் தெருக்களில் ஆங்காங்கே குழாய்கள் அமைது அந்த குழாய்களை ஒருங்கிணைத்து குளத்தின் அடிப்பகுதிக்கு மழை நீர் சென்று சேரும் விதத்தில் ஒரு கட்டமைப்பை அமைத்தனர். அவ்வாறு மழை நீர் குளத்தில் சென்று சேர்ந்தாலும் சுமார் ஒரு மணி நேரத்தில் நீர் உறிஞ்சப்படுகிறது.
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…