சாந்தோம் கதீட்ரலில் புதியதாக பொறுப்பேற்றுள்ள பாதிரியார் இந்த கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள பல குடும்பங்களுக்கு உதவ ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

சாந்தோம் புனித தோமையார் பேராலயத்தில் சமீபத்தில் புதிய பாதிரியாராக அருள்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போரூர் பகுதியை சேர்ந்தவர். பாதிரியார் அருள்ராஜுக்கு தற்போது முக்கியமான சவால் என்னவெனில், இந்த பகுதியில் சுமார் ஐம்பது குடும்பங்களில் உள்ள முக்கியமாக வருமானம் ஈட்டக்கூடிய நபர்கள் கடந்த ஒரு வருடமாக வேலை இல்லாமல் இருந்துள்ளனர். இவர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அதனால் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து தேவாலயத்தில் உதவி கேட்டுள்ளனர்.

பாதிரியார் கடந்த ஞாயிற்றுகிழமை நடத்தப்பட்ட பூசையின் போது அங்கு வந்திருந்த மக்களிடம், வசதிபடைத்தவர்கள் இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு குடும்பம் ஒரு குழந்தையின் கல்வி கட்டணத்தை செலுத்த உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனெவே ஐந்து முதல் ஏழு குடும்பங்கள் இதுபோன்று கஷ்ப்படுபவர்களுக்கு அவர்களின் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை ஏற்க முன் வந்துள்ளதாகவும், மேலும் இன்னும் பலர் வருவார்கள் என்றும் பாதிரியார் எதிர்பார்க்கிறார்.

admin

Recent Posts

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா. மே 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 28ல் தேர் திருவிழா.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…

4 days ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான திரு. பி. வெங்கட்ரமணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…

1 week ago

ஆர். ஏ. புரத்திலுள்ள டாஸ்மாக் ‘எலைட்’ கடையை மூட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை.

ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…

2 weeks ago

மந்தைவெளியில் உள்ள டாஸ்மாக் மது விற்பனைக் கடை நிரந்தரமாக மூடப்பட்டது.

மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…

2 weeks ago

இந்த டிரை கிளீனிங் வாகனம் வீட்டு வாசலுக்கே வந்து சேவை வழங்குகிறது.

உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…

2 weeks ago

தயாராகி வரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரின் புதிய அலுவலகம்.

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…

2 weeks ago