செய்திகள்

தோட்டக்கலை துறையின் சார்பாக மானிய விலையில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச கிட்

தமிழக அரசின் தோட்டக்கலை துறை வீட்டில் மாடித்தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் சுமார் இரண்டாயிரம் கிட்களை தயாரித்து வழங்கவுள்ளனர். இதற்க்கான மாதிரி செயல்விளக்கம் இன்று ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்றது.

கிட் 1: ரூ.720. இதில் ஹோஸ், இணைப்பு, பில்டர் ஆகியவை.
கிட் 2: ரூ.2880 இதில் ஹோஸ், இணைப்பு, பில்டர் தவிர டைமர் டிவைசும் உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் நாம் வெளியூர் சென்றாலும் நம்முடைய மொபைல் வழியாக ட்ரிப் ஆன் செய்து செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சலாம். இதற்க்கான செயல் விளக்க கையேடும் வழங்குகின்றனர்.

இது கோடைகாலத்தில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சிறந்த முறையாகும். மேற்கண்ட கிட்களுக்கு அரசு மானியமும் வழங்குகின்றனர். இது சம்பந்தமாக மேலும் விவரங்கள் பெற திருவான்மியூரிலுள்ள ராஜீவனை தொடர்புகொள்ளவும் தொலைபேசி எண் : 98402 55347

admin

Recent Posts

ஆர்.ஏ.புரம் சமூக திட்டத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…

2 days ago

இந்த கோடையில் வீட்டில் வத்தல் தயாரிக்கிறீர்களா?

இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…

2 days ago

ஆர் கே மட சாலையில் இருந்த தற்காலிக பேருந்து நிறுத்தம் இடமாற்றம்.

ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…

2 days ago

கோடை காலத்திற்காக சித்திரகுளத்தில் தற்காலிக குடிநீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…

3 days ago

பேருந்து நிறுத்தங்களில் தங்குமிடங்களுக்கான பயணிகளின் வேண்டுகோளுக்கு சென்னை மெட்ரோ இறுதியாக பதிலளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…

3 days ago

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

4 days ago