மந்தைவெளியில் வசித்து வரும் ராகவேந்தர் ஒரு பொறியியல் பட்டதாரி. மேலும் இவர் சாந்தோம் மேல்நிலை பள்ளியில் பயின்றவர் சுமார் ஐந்து வருடங்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பின்பு வேலையை விட்டுவிட்டு புதிதாக தொழில் செய்ய விரும்பினார். ஆனால் சூழ்நிலை சரியில்லாததால் கடந்த மாதம் பி.எஸ் பள்ளிக்கு எதிரே பழச்சாறு கடை தொடங்கி நடத்தி வந்தார்.
தற்போது உள்ள சூழ்நிலையால் இந்த தொழிலை நடத்த முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் ராகவேந்தரும் அவருடைய நண்பரும் சேர்ந்து மயிலாப்பூரில் ‘We Care Mylapore’ என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வீட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கும், மயிலாப்பூர் / மந்தைவெளியில் உள்ள மூத்த குடிமக்களுக்கும் இலவசமாக விநியோகம் செய்வதாக அவர்கள் உறுதியளிக்கிறார்கள்.
நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் செய்ய வேண்டும். அவர்கள் உங்கள் வீட்டருகே வந்து பணத்தை பெற்றுக்கொண்டு தேவைப்படுவோருக்கு தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்குகிறார்கள். ராகவேந்தரை 8610701344 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இது ஒரு இலவச தன்னார்வ சேவையாகும்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…