செய்திகள்

மூத்தகுடிமக்களுக்கும் மற்றும் கொரோனாவினால் தனிமைப்படுத்திகொண்டோருக்கும் உணவுகள் மற்றும் மருந்துகளின் விநியோகத்தை இலவசமாக செய்து வரும் ‘வி கேர் மயிலாப்பூர்’ தன்னார்வ குழு.

மந்தைவெளியில் வசித்து வரும் ராகவேந்தர் ஒரு பொறியியல் பட்டதாரி. மேலும் இவர் சாந்தோம் மேல்நிலை பள்ளியில் பயின்றவர் சுமார் ஐந்து வருடங்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பின்பு வேலையை விட்டுவிட்டு புதிதாக தொழில் செய்ய விரும்பினார். ஆனால் சூழ்நிலை சரியில்லாததால் கடந்த மாதம் பி.எஸ் பள்ளிக்கு எதிரே பழச்சாறு கடை தொடங்கி நடத்தி வந்தார்.

தற்போது உள்ள சூழ்நிலையால் இந்த தொழிலை நடத்த முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் ராகவேந்தரும் அவருடைய நண்பரும் சேர்ந்து மயிலாப்பூரில் ‘We Care Mylapore’ என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வீட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கும், மயிலாப்பூர் / மந்தைவெளியில் உள்ள மூத்த குடிமக்களுக்கும் இலவசமாக விநியோகம் செய்வதாக அவர்கள் உறுதியளிக்கிறார்கள்.

நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் செய்ய வேண்டும். அவர்கள் உங்கள் வீட்டருகே வந்து பணத்தை பெற்றுக்கொண்டு தேவைப்படுவோருக்கு தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்குகிறார்கள். ராகவேந்தரை 8610701344 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இது ஒரு இலவச தன்னார்வ சேவையாகும்.

admin

Recent Posts

பழங்கால தமிழ் திரைப்பட ஹிட் பாடல்களின் கச்சேரி. மே 1. அனுமதி இலவசம்

பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…

14 hours ago

முத்துசுவாமி தீட்சிதருக்கு அஞ்சலி: தீம் மியூசிக்கல் ஷோ. ஏப்ரல் 28ல்.

மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…

15 hours ago

டாக்டர் சித்ரா மாதவன் உரை: தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள். ஏப்ரல் 27

தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…

15 hours ago

தற்கொலை செய்து கொண்ட ஒருவரை இழந்த மக்களுக்கு ஆதரவாக சேவையை தொடங்கும் SNEHA அமைப்பு.

ஆர்.ஏ புரத்தில் உள்ள SNEHA, தற்கொலை தடுப்பு சமூக அமைப்பானது, ஏப்ரல் 25 அன்று தற்கொலைக்குப் பிறகு ஆதரவு (SAS)…

3 days ago

இமயத்தின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட நாடகம். ஏப்ரல் 27 மாலை. ஆழ்வார்பேட்டை

சாகித்ய அகாடமி வெற்றியாளர் இமயத்தின் தமிழ் சிறுகதைகளை தழுவி பிரசன்னா ராமசாமி இயக்கிய நாடக அரங்கேற்றம் ஏப்ரல் 27 அன்று…

3 days ago

சென்னை மெட்ரோ: திருமயிலை ரயில் நிலையம் அருகில் கால்வாய் பாலம் இருந்த பகுதியில் ஆழமான அகழாய்வு.

லஸ் மண்டலத்தில் பணிபுரியும் சென்னை மெட்ரோவின் ஒப்பந்ததாரர் திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் எதிரே உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில்…

3 days ago