லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் பிரதான வாயிலுக்கு அருகில் மாநகராட்சியால் ஒரு கழிவறை கட்டப்பட்டு வருகிறது.
பூங்காவிற்குள் மெயின் நுழைவாயில் வழியாக வந்து வெளியேற்பவர்களுக்கு பயன்படும் என்று கூறப்படுகிறது.
பூங்காவின் பின்பகுதியிலும், பின்புற வாயிலுக்கு அருகிலும் இ-டாய்லெட்கள் வைக்கப்பட்டுள்ளன, அவை பராமரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாக பூங்கா மேலாளர் கூறுகிறார். எனவே சில பூங்கா பயனர்கள், உண்மையில் ஒரு பக்கா கழிவறையை கட்ட வேண்டிய அவசியமா? என்று ஆச்சரியப்படுகிறார்கள்.
பூங்காவின் மிக முக்கியமான தேவை அதன் சுற்றுச் சுவர்களை சரிசெய்வதாகும்; பல பிரிவுகளில் உள்ள இரும்பிலான கம்பிகள் தேய்ந்துவிட்டன அல்லது சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சிலர் பூங்கா இரவில் மூடிய பிறகு தூங்குவதற்கும் மற்றும் மதுபானம் அருந்துவதற்கும் பயன்படுத்துகின்றனர்.
புகைப்படம் : பாஸ்கர் சேஷாத்ரி
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…