நாகேஸ்வரராவ் பூங்காவில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை

லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் பிரதான வாயிலுக்கு அருகில் மாநகராட்சியால் ஒரு கழிவறை கட்டப்பட்டு வருகிறது.

பூங்காவிற்குள் மெயின் நுழைவாயில் வழியாக வந்து வெளியேற்பவர்களுக்கு பயன்படும் என்று கூறப்படுகிறது.

பூங்காவின் பின்பகுதியிலும், பின்புற வாயிலுக்கு அருகிலும் இ-டாய்லெட்கள் வைக்கப்பட்டுள்ளன, அவை பராமரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாக பூங்கா மேலாளர் கூறுகிறார். எனவே சில பூங்கா பயனர்கள், உண்மையில் ஒரு பக்கா கழிவறையை கட்ட வேண்டிய அவசியமா? என்று ஆச்சரியப்படுகிறார்கள்.

பூங்காவின் மிக முக்கியமான தேவை அதன் சுற்றுச் சுவர்களை சரிசெய்வதாகும்; பல பிரிவுகளில் உள்ள இரும்பிலான கம்பிகள் தேய்ந்துவிட்டன அல்லது சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சிலர் பூங்கா இரவில் மூடிய பிறகு தூங்குவதற்கும் மற்றும் மதுபானம் அருந்துவதற்கும் பயன்படுத்துகின்றனர்.

புகைப்படம் : பாஸ்கர் சேஷாத்ரி

Verified by ExactMetrics