மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பெருவிழா மார்ச் மூன்றாவது வாரத்தில் நடைபெறவுள்ளது. கடந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக பங்குனிபெருவிழா நடைபெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கோவில் குருக்கள், வழக்கமாக கோவிலில் நடைபெறும் விழாக்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் நடைபெறவில்லை என்றால், விடுபட்ட பிரமோற்சவ விழாவை அடுத்து வரும் சரியான தேதியில் சரியான நேரத்தில் மீண்டும் நடத்தலாம் என்றும், எனவே வரவுள்ள தை, மாசி மாதங்களில் பிரமோற்சவ விழாக்களை நடத்தலாம். என்று கோவில் குருக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது பற்றி அரசு அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கோவிலில் நடைபெற்ற நடராஜர் பிரமோற்சவம் கொரோனா ஊரடங்கு தளர்வின் காரணமாக அரசு அனுமதியளித்ததை அடுத்து கோவிலுக்கு வெளியேயும் மாடவீதிகளில் சாமி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.
எனவே தற்போது சூழ்நிலை ஓரளவு சரியாகி உள்ள நிலையில் விடுபட்ட பிரமோற்சவ விழாவை நடத்த அரசு அனுமதிக்குமா என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அவ்வாறு அனுமதி அளித்தால் இந்த வருடம் இரண்டு பிரமோற்சவ விழாக்கள் நடைபெறும்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…