மாநில கல்வி அமைச்சர் பங்கேற்ற புனித அந்தோணியார் பெண்கள் பள்ளியின் 125வது ஆண்டு விழா.

பாண்டிச்சேரியிலிருந்து முதன்முதலில் இங்கு குடியேறிய கன்னியாஸ்திரிகளின் பான் செகோர்ஸ் சபையால் தொடங்கப்பட்ட பள்ளியின் 125வது ஆண்டு விழா இது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட இருந்தது. கொரோனா தொற்று நேர விதிமுறைகள் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நிகழ்ச்சி தள்ளி போடப்பட்டு வந்தது.

இறுதியாக, இது வெள்ளிக்கிழமையன்று சாந்தோம் நெடுஞ்சாலையிலுள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

மாநில கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

முதுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் கலந்துகொண்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமியின் புனித ஆராதனையுடன் காலை நிகழ்ச்சிகள் தொடங்கியது.

பின்னர் அமைச்சர் பங்கேற்ற சம்பிரதாய நிகழ்வைத் தொடர்ந்து. அரங்கத்திற்கு வெளியே அவருக்கு மாணவர் தலைவர்கள் மற்றும் இசைக்குழுவினர் முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

சிறப்பு நினைவுப் பரிசு வெளியிடப்பட்டது. 2021 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மேடையில் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், பள்ளி மற்றும் சபை சார்பில் பொருளாதாரத்தில் ஏழ்மையான, கல்வியில் சிறந்து விளங்கும் 50 மாணவர்களுக்கு ரூ.5000 மதிப்பிலான நிலையான வைப்பு நிதி சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மற்ற விருந்தினர்களாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரசியல்வாதியும், மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் மற்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

பான் செகோர்ஸ் சபைக்கு தலைமை தாங்கும் அனைத்து கன்னியாஸ்திரிகளும் கலந்து கொண்டனர்.

admin

Recent Posts

தேர்தல் 2026: ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார் – பாஜக தேர்தல் பிரச்சாரம்

பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…

1 day ago

விண்ணை பிளந்த கோஷங்களுடன் நடைபெற்ற கபாலீஸ்வரர் கோவிலின் தேர் திருவிழா.

மயிலாப்பூர் அனைவரையும் ஈர்க்கிறது; அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்தின் பங்குனித் திருவிழாக் காலத்தில், ஆலய வளாகமும்…

3 days ago

தேர்தல் 2026: தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தா. வேலுவை மீண்டும் போட்டியிடத் தேர்வு செய்தது திமுக

மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான தா. வேலுவை, 2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கான தனது வேட்பாளராக திமுக தேர்வு செய்துள்ளது.…

3 days ago

தேர்தல் 2026: மயிலாப்பூரில் போட்டியிடுகிறார் தவெக கட்சியின் பொருளாளர் பி. வெங்கட்ரமணன்

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களில், மயிலாப்பூர் தொகுதியிலிருந்து போட்டியிடுவதற்கான தமிழக வெற்றி கழக கட்சியின் வேட்பாளராக,  கட்சியின் பொருளாளர் பி.…

3 days ago

பங்குனித் திருவிழா தேரோட்டத்தை வரைவபவர்களின் சந்திப்பு – மார்ச் 29

மயிலாப்பூரில் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் தேரோட்ட நிகழ்வுகளை வரைவதற்காக, 'சென்னை வீக்கெண்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ்' (CWA) குழுவின் உறுப்பினர்கள் மாட வீதிகளின்…

5 days ago

இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் – ஸ்ரீ மகாவீர் சேவா சங்கம், ஆர்.ஏ.புரம். மார்ச் 29.

இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் – ஸ்ரீ மகாவீர் சேவா சங்கம், ஆர்.ஏ.புரம். மார்ச் 29.…

5 days ago