மாநில கல்வி அமைச்சர் பங்கேற்ற புனித அந்தோணியார் பெண்கள் பள்ளியின் 125வது ஆண்டு விழா.

பாண்டிச்சேரியிலிருந்து முதன்முதலில் இங்கு குடியேறிய கன்னியாஸ்திரிகளின் பான் செகோர்ஸ் சபையால் தொடங்கப்பட்ட பள்ளியின் 125வது ஆண்டு விழா இது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட இருந்தது. கொரோனா தொற்று நேர விதிமுறைகள் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நிகழ்ச்சி தள்ளி போடப்பட்டு வந்தது.

இறுதியாக, இது வெள்ளிக்கிழமையன்று சாந்தோம் நெடுஞ்சாலையிலுள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

மாநில கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

முதுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் கலந்துகொண்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமியின் புனித ஆராதனையுடன் காலை நிகழ்ச்சிகள் தொடங்கியது.

பின்னர் அமைச்சர் பங்கேற்ற சம்பிரதாய நிகழ்வைத் தொடர்ந்து. அரங்கத்திற்கு வெளியே அவருக்கு மாணவர் தலைவர்கள் மற்றும் இசைக்குழுவினர் முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

சிறப்பு நினைவுப் பரிசு வெளியிடப்பட்டது. 2021 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மேடையில் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், பள்ளி மற்றும் சபை சார்பில் பொருளாதாரத்தில் ஏழ்மையான, கல்வியில் சிறந்து விளங்கும் 50 மாணவர்களுக்கு ரூ.5000 மதிப்பிலான நிலையான வைப்பு நிதி சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மற்ற விருந்தினர்களாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரசியல்வாதியும், மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் மற்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

பான் செகோர்ஸ் சபைக்கு தலைமை தாங்கும் அனைத்து கன்னியாஸ்திரிகளும் கலந்து கொண்டனர்.

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

3 weeks ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

2 months ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago