மாநில கல்வி அமைச்சர் பங்கேற்ற புனித அந்தோணியார் பெண்கள் பள்ளியின் 125வது ஆண்டு விழா.

பாண்டிச்சேரியிலிருந்து முதன்முதலில் இங்கு குடியேறிய கன்னியாஸ்திரிகளின் பான் செகோர்ஸ் சபையால் தொடங்கப்பட்ட பள்ளியின் 125வது ஆண்டு விழா இது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட இருந்தது. கொரோனா தொற்று நேர விதிமுறைகள் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நிகழ்ச்சி தள்ளி போடப்பட்டு வந்தது.

இறுதியாக, இது வெள்ளிக்கிழமையன்று சாந்தோம் நெடுஞ்சாலையிலுள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

மாநில கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

முதுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் கலந்துகொண்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமியின் புனித ஆராதனையுடன் காலை நிகழ்ச்சிகள் தொடங்கியது.

பின்னர் அமைச்சர் பங்கேற்ற சம்பிரதாய நிகழ்வைத் தொடர்ந்து. அரங்கத்திற்கு வெளியே அவருக்கு மாணவர் தலைவர்கள் மற்றும் இசைக்குழுவினர் முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

சிறப்பு நினைவுப் பரிசு வெளியிடப்பட்டது. 2021 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மேடையில் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், பள்ளி மற்றும் சபை சார்பில் பொருளாதாரத்தில் ஏழ்மையான, கல்வியில் சிறந்து விளங்கும் 50 மாணவர்களுக்கு ரூ.5000 மதிப்பிலான நிலையான வைப்பு நிதி சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மற்ற விருந்தினர்களாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரசியல்வாதியும், மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் மற்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

பான் செகோர்ஸ் சபைக்கு தலைமை தாங்கும் அனைத்து கன்னியாஸ்திரிகளும் கலந்து கொண்டனர்.

admin

Recent Posts

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 days ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

1 week ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

1 week ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

3 weeks ago