பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், கணினி கல்வி பயிற்சிக்கு நன்கொடை.

மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் 1972 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் பொன்விழா சந்திப்பு நடைபெற்றது. இந்த பொன்விழா சந்திப்பை குறிக்கும் வகையில் பள்ளியில் கணினி கல்வி பயிற்சிக்கு நன்கொடை வழங்கப்பட்டது.

பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் கல்வியில் பயிற்சி அளிக்க பள்ளிக்கு ரூ.13.4 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. இந்த நன்கொடை மூலம் பாட நிபுணத்துவ ஆசிரியர்களை பணியமர்த்துவதன் மூலம் மாணவர்களுக்கு சிறப்பான கணினி கல்வியை வழங்க முடியும்.

இந்நிகழ்வில், தற்போது 90 வயதை எட்டியுள்ள, அந்தக் காலத்தில் பள்ளியில் பணியாற்றிய ஐந்து ஆசிரியர்களையும் குழு கௌரவித்தது. கவுரவிக்கப்பட்ட ஆசிரியர்கள் – சுப்பிரமணியன், அறிவியல் ஆசிரியர்; ரமணி, PT ஆசிரியர்; ஆர்.குமாரசாமி, தமிழ் ஆசிரியர்; கணித ஆசிரியர் நடராஜன், சமூக அறிவியல் ஆசிரியர் ராமச்சந்திரன்.

ஆசிரியர்கள் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் வேஷ்டி மற்றும் அங்கவஸ்திரம் மற்றும் ரொக்க சம்பாவனையும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மறைந்த ஆசிரியர்களுக்காகவும், 1972 ஆம் ஆண்டு வகுப்பைச் சேர்ந்த வகுப்பு தோழர்களுக்காகவும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago