ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வருடாந்திர வைகாசி திருவிழா நிகழ்ச்சி விவரங்கள்

மயிலாப்பூரில் உள்ள வெள்ளீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பத்து நாள் திருவிழா இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ஜூன் 5-ஆம் தேதி காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ஜூன் 7-ஆம் தேதி காலை 6 மணிக்கு அதிகார நந்தி ஊர்வலம், ஜூன் 9-ஆம் தேதி இரவு 9 மணிக்கு ரிஷப வாகனம், ஜூன் 11-ஆம் தேதி காலை 7 மணிக்கு தேர் ஊர்வலம் நடைபெறவுள்ளது. மேலும் ஜூன் 14-ஆம் தேதி இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உற்சவம் நடைபெறாததால், இந்த முறை பிரம்மாண்டமான கொண்டாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அனைத்து வாகனங்களுக்கும் மீண்டும் வர்ணம் பூசிவருதாகவும், செவ்வாய்க்கிழமை காலை மயிலாப்பூர் டைம்ஸிடம் கோவில் அறங்காவலர் எஸ் பிரபாகரன் தெரிவித்தார்.

மேலும், தினமும் மாலையில் நகரைச் சேர்ந்த பல்வேறு நாதஸ்வரம் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்றார்.

மற்றொரு அறங்காவலர் எஸ்.நாகராஜன், விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான பிரசாதங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மயிலாப்பூர் செங்குன்ற மகா சபை சார்பில் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விடையாற்றி உற்சவம்

ஜூன் 16 ஆம் தேதி தொடங்கும் பத்து நாள் விடையாற்றி உற்சவத்தின் ஒரு பகுதியாக, இளம் கலைஞர்களுக்கு தினமும் காலை 6 மணி முதல் கச்சேரி வழங்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மாலை, 7.30 மணிக்கு துவங்கி, பத்து நாட்களிலும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

செய்தி: எஸ்.பிரபு.

admin

Recent Posts

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

3 days ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 weeks ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 weeks ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

3 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

4 weeks ago