ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வருடாந்திர வைகாசி திருவிழா நிகழ்ச்சி விவரங்கள்

மயிலாப்பூரில் உள்ள வெள்ளீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பத்து நாள் திருவிழா இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ஜூன் 5-ஆம் தேதி காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ஜூன் 7-ஆம் தேதி காலை 6 மணிக்கு அதிகார நந்தி ஊர்வலம், ஜூன் 9-ஆம் தேதி இரவு 9 மணிக்கு ரிஷப வாகனம், ஜூன் 11-ஆம் தேதி காலை 7 மணிக்கு தேர் ஊர்வலம் நடைபெறவுள்ளது. மேலும் ஜூன் 14-ஆம் தேதி இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உற்சவம் நடைபெறாததால், இந்த முறை பிரம்மாண்டமான கொண்டாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அனைத்து வாகனங்களுக்கும் மீண்டும் வர்ணம் பூசிவருதாகவும், செவ்வாய்க்கிழமை காலை மயிலாப்பூர் டைம்ஸிடம் கோவில் அறங்காவலர் எஸ் பிரபாகரன் தெரிவித்தார்.

மேலும், தினமும் மாலையில் நகரைச் சேர்ந்த பல்வேறு நாதஸ்வரம் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்றார்.

மற்றொரு அறங்காவலர் எஸ்.நாகராஜன், விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான பிரசாதங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மயிலாப்பூர் செங்குன்ற மகா சபை சார்பில் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விடையாற்றி உற்சவம்

ஜூன் 16 ஆம் தேதி தொடங்கும் பத்து நாள் விடையாற்றி உற்சவத்தின் ஒரு பகுதியாக, இளம் கலைஞர்களுக்கு தினமும் காலை 6 மணி முதல் கச்சேரி வழங்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மாலை, 7.30 மணிக்கு துவங்கி, பத்து நாட்களிலும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

செய்தி: எஸ்.பிரபு.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…

2 days ago

2026 தேர்தல்: பொது இடங்களில் உள்ள அரசு சார்ந்த விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை மறைக்கும் பணியாளர்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…

3 days ago

தொல்காப்பியப் பூங்காவின் முகத்துவாரப் பகுதி வற்றி வருகிறதா?

தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…

3 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம்: மார்ச் 16

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்), திங்கட்கிழமை, மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல்…

6 days ago

இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி, அரிசி பொருட்கள் விற்பனை.

மயிலாப்பூர் வாரன் சாலையில் வசிக்கும் அதிதி, 2025 முதல் பாரம்பரிய நெல் வகைகளின் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் அரிசி…

6 days ago

சட்டம், மேலாண்மை படிப்புகளுக்கான ஆலோசனை.

அபிராமபுரத்தில் அமைந்துள்ள கேரியர் லாஞ்சர் நிறுவனம், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு 9, 10 மற்றும் 11…

6 days ago