அரவிந்த் கண் மருத்துவமனையின் சிட்டி சென்டர் மயிலாப்பூர் நஞ்சுண்ட ராவ் காலனியில் திறப்பு. அடிப்படை ஆலோசனை மற்றும் சிகிச்சை இங்கு வழங்கப்படுகிறது

அரவிந்த் கண் மருத்துவமனையின் சிட்டி சென்டர் மயிலாப்பூரில் உள்ள நஞ்சுண்ட ராவ் காலனியில் தனது சேவைகளைத் திறந்துள்ளது.

மதுரையை தலைமையிடமாகக் கொண்ட புகழ்பெற்ற அரவிந்த் மருத்துவமனை நெட்வொர்க்கின் ஒரு பகுதியான இந்த மையம் செப்டம்பர் 11 அன்று திறக்கப்பட்டது.

டாக்டர். குமார் ஹரிஹரன், MS, DNB, FRCS இந்த மையத்திற்கு தலைமை வகிக்கிறார். இங்கு கண் நோய்கள் தொடர்பான அனைத்து ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அறுவைசிகிச்சை தேவை என்றால் மட்டுமே மக்கள் பூந்தமல்லி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

அறுவை சிகிச்சைக்கு பின் தொடரப்படும் சிகிச்சைகளை இங்கே பெறலாம் என்று மயிலாப்பூர் மையத்தின் ஊழியர் ஒருவர் கூறினார்.

மயிலாப்பூரில் ஆப்டிகல் ஸ்டோர் மற்றும் மெடிக்கல் ஸ்டோர் உள்ளது. உயர்தர கண்ணாடிகளை இங்கு சரியான விலையில் வாங்கலாம்.

முழுமையான கண் பரிசோதனைக்கு 100 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர். அத்தகையவர்கள் தங்கள் தொடர் ஆலோசனையை இங்கே தொடரலாம்.

இந்த மையம் கிட்ட பார்வை மற்றும் தூர பார்வை, நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட பார்வை குறைபாடு மற்றும் இது போன்ற பிற கண் சம்பந்தமான நோய்களை பரிசோதிக்கிறது.

“பூந்தமல்லியில் உள்ள எங்கள் மருத்துவமனைக்குச் செல்வதில் உள்ள சிரமத்தைத் தவிர்க்க மயிலாப்பூரில் இந்த மையத்தைத் திறந்துள்ளோம்” என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

மையம் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். (திங்கள் முதல் சனிக்கிழமை வரை). இங்கு வேலை நேரம் முழுவதும் மருத்துவர்கள் இருப்பார்கள்.

அரவிந்த் ஐ கேர் சிஸ்டம் கோயம்புத்தூர், திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி, திருப்பதி உள்ளிட்ட 14 நகரங்களில் மையங்களைக் கொண்டுள்ளது.

அரவிந்த் சிட்டி சென்டர் 1A, நஞ்சுண்ட ராவ் காலனி, வெங்கடேச அக்ரஹாரா சாலையில் (சாய்பாபா கோயிலுக்கு அருகில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடைக்குப் பின்னால்) மயிலாப்பூரில் உள்ளது. தொலைபேசி எண்: 044 35356111/ 9171414085

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் அரவிந்த் கண் மருத்துவமனையின் புகைப்படம், பிரதிநிதித்துவத்திற்காக மட்டுமே.

செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

6 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

7 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

3 weeks ago