நாகேஸ்வரராவ் பூங்காவில் ஓவிய விழா. பிப்ரவரி 25. காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை.

லஸ்ஸில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்கா இந்த ஞாயிற்றுக்கிழமை கலைஞர்களின் சோலையாக மாறவுள்ளது.

ஓவிய விழா (Art Fest) சென்னையின் 2024 பதிப்பில் சென்னை மற்றும் வெளியில் இருந்து 75 கலைஞர்கள் தங்கள் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை காட்சிப்படுத்தவுள்ளனர்.

பார்வையாளர்கள் பூங்காவின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு நடந்து செல்லும்போது கலைஞர்களின் ஓவியங்களை பார்த்து ரசிக்க முடியும். Art Fest என்பது பொதுமக்களுக்கான ஒரு ஓவிய விழா (இலாப நோக்கமற்றது).

ஜெத் நகரைச் சேர்ந்த ஓவியர் ஷிவ் குமார் (புகைப்படத்தில் காணப்படுவது) நிகழ்ச்சியில் 25 ஓவியங்களை வைக்கத் திட்டமிட்டுள்ளார். “அவற்றில் பெரும்பாலானவை நீர் வண்ணங்கள் மற்றும் சில உயர்தர கடினமான பலகையில் அச்சிடப்பட்ட டிஜிட்டல் கலை.” என்று கூறுகிறார்.

2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான இரண்டு பயிற்சி பட்டறைகள், பிப்ரவரி 25 ஞாயிற்றுக்கிழமை கலைஞர் ஸ்ரேயா சுராஜ் அவர்களால் நடத்தப்படுகிறது. மேலும் விவரங்கள் மயிலாப்பூர் டைம்ஸ் வெப்சைட்டில் உள்ளது. இதில் பங்குபெற குறைந்த அளவு இருக்கைகள் மட்டுமே உள்ளது.

பிப்ரவரி 25 அன்று காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை இந்த ஓவிய விழா நடைபெறுகிறது.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago