மயிலாப்பூர் தபால் நிலையத்தில், முதியோர்கள் ஆதார் அட்டை சேவை மையத்தை அணுகுவது மிகுந்த சிரமமாக உள்ளது.

மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகம் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது மேலும் அவ்வப்போது மேலும் பல புது சேவைகளை சேர்க்கிறது.

ஆனால் அதன் வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு சில அடிப்படை வசதிகள் உள்ளதா?

சாந்தோமை சேர்ந்த ஒருவர், தபால் அலுவலக மேலாளர்கள் ஒரு தீவிரமான பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும். பொது சேவைகளுக்கான கவுண்டர்கள் உள்ள சில பகுதிகளை, மூத்த குடிமக்கள் அணுகும் வகையில் எளிதாக்க வேண்டும், முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய இடம் ஆதார் அட்டை சேவைகள் பிரிவு என்று கூறுகிறார்.

95 வயதான தனது தாயாரின் மொபைல் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும், அதை தபால் நிலையத்தில் செய்து கொள்ளலாம் என்று, தபால் அலுவலகத்திற்கு தனது தாயாருடன் வந்த அவருக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டதாக சசிகலா சந்திரன் கூறுகிறார்.

மூத்த குடிமக்களின் கைரேகைகள் தேய்ந்து போவதால், கருவிழி சரிபார்ப்பிற்காக ஆதார் அட்டை போன்ற ஆவணங்களில் அடையாளத்தை இ சேவை அலுவலகத்திலோ அல்லது தபால் நிலையத்திலோ கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்கிறார்.

கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில், ஆதார் அட்டை சேவைகள் வழங்கப்படும் பகுதி கட்டிடத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ளது, அங்கு மூத்தகுடிமக்கள் எளிதில் சென்று வர முடியாதவாறு மூன்று சீரற்ற படிகள் உள்ளன. இதனால் அவர்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது.

மேலும், “வயதானவர்கள் வழுக்கி விழுந்தால் என்ன செய்வது? முதியோர்கள் தேவையற்ற சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க இந்திய தபால் அதிகாரிகளால் ஏன் மாற்று ஏற்பாடுகளை செய்ய முடியாது. என்று கேட்கிறார் சசிகலா சந்திரன்.

கைரேகை சரிபார்ப்பிற்காக சாந்தோமில் உள்ள தங்கள் வீட்டிற்குச் வந்த தபால்காரருக்கு சசிகலா பாராட்டு தெரிவிக்கிறார். “அவர்கள் மிகவும் கடமைப்பட்டவர்களாகவும் அன்பானவர்களாகவும் இருந்தனர்,” என்று அவர் கூறுகிறார்.

புகைப்படம்: சசிகலா சந்திரன்.

<<மயிலாப்பூர் மண்டலத்தில் முதியவர்களை பாதிக்கும் பிரச்சினைகள் உள்ளதா? செய்திகளை எங்களுடன் பகிரவும்.>>

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 days ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

3 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

3 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

4 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

7 days ago