மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகம் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது மேலும் அவ்வப்போது மேலும் பல புது சேவைகளை சேர்க்கிறது.
ஆனால் அதன் வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு சில அடிப்படை வசதிகள் உள்ளதா?
சாந்தோமை சேர்ந்த ஒருவர், தபால் அலுவலக மேலாளர்கள் ஒரு தீவிரமான பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும். பொது சேவைகளுக்கான கவுண்டர்கள் உள்ள சில பகுதிகளை, மூத்த குடிமக்கள் அணுகும் வகையில் எளிதாக்க வேண்டும், முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய இடம் ஆதார் அட்டை சேவைகள் பிரிவு என்று கூறுகிறார்.
95 வயதான தனது தாயாரின் மொபைல் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும், அதை தபால் நிலையத்தில் செய்து கொள்ளலாம் என்று, தபால் அலுவலகத்திற்கு தனது தாயாருடன் வந்த அவருக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டதாக சசிகலா சந்திரன் கூறுகிறார்.
மூத்த குடிமக்களின் கைரேகைகள் தேய்ந்து போவதால், கருவிழி சரிபார்ப்பிற்காக ஆதார் அட்டை போன்ற ஆவணங்களில் அடையாளத்தை இ சேவை அலுவலகத்திலோ அல்லது தபால் நிலையத்திலோ கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்கிறார்.
கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில், ஆதார் அட்டை சேவைகள் வழங்கப்படும் பகுதி கட்டிடத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ளது, அங்கு மூத்தகுடிமக்கள் எளிதில் சென்று வர முடியாதவாறு மூன்று சீரற்ற படிகள் உள்ளன. இதனால் அவர்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது.
மேலும், “வயதானவர்கள் வழுக்கி விழுந்தால் என்ன செய்வது? முதியோர்கள் தேவையற்ற சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க இந்திய தபால் அதிகாரிகளால் ஏன் மாற்று ஏற்பாடுகளை செய்ய முடியாது. என்று கேட்கிறார் சசிகலா சந்திரன்.
கைரேகை சரிபார்ப்பிற்காக சாந்தோமில் உள்ள தங்கள் வீட்டிற்குச் வந்த தபால்காரருக்கு சசிகலா பாராட்டு தெரிவிக்கிறார். “அவர்கள் மிகவும் கடமைப்பட்டவர்களாகவும் அன்பானவர்களாகவும் இருந்தனர்,” என்று அவர் கூறுகிறார்.
புகைப்படம்: சசிகலா சந்திரன்.
<<மயிலாப்பூர் மண்டலத்தில் முதியவர்களை பாதிக்கும் பிரச்சினைகள் உள்ளதா? செய்திகளை எங்களுடன் பகிரவும்.>>
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…