மயிலாப்பூர் தபால் நிலையத்தில், முதியோர்கள் ஆதார் அட்டை சேவை மையத்தை அணுகுவது மிகுந்த சிரமமாக உள்ளது.

மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகம் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது மேலும் அவ்வப்போது மேலும் பல புது சேவைகளை சேர்க்கிறது.

ஆனால் அதன் வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு சில அடிப்படை வசதிகள் உள்ளதா?

சாந்தோமை சேர்ந்த ஒருவர், தபால் அலுவலக மேலாளர்கள் ஒரு தீவிரமான பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும். பொது சேவைகளுக்கான கவுண்டர்கள் உள்ள சில பகுதிகளை, மூத்த குடிமக்கள் அணுகும் வகையில் எளிதாக்க வேண்டும், முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய இடம் ஆதார் அட்டை சேவைகள் பிரிவு என்று கூறுகிறார்.

95 வயதான தனது தாயாரின் மொபைல் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும், அதை தபால் நிலையத்தில் செய்து கொள்ளலாம் என்று, தபால் அலுவலகத்திற்கு தனது தாயாருடன் வந்த அவருக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டதாக சசிகலா சந்திரன் கூறுகிறார்.

மூத்த குடிமக்களின் கைரேகைகள் தேய்ந்து போவதால், கருவிழி சரிபார்ப்பிற்காக ஆதார் அட்டை போன்ற ஆவணங்களில் அடையாளத்தை இ சேவை அலுவலகத்திலோ அல்லது தபால் நிலையத்திலோ கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்கிறார்.

கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில், ஆதார் அட்டை சேவைகள் வழங்கப்படும் பகுதி கட்டிடத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ளது, அங்கு மூத்தகுடிமக்கள் எளிதில் சென்று வர முடியாதவாறு மூன்று சீரற்ற படிகள் உள்ளன. இதனால் அவர்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது.

மேலும், “வயதானவர்கள் வழுக்கி விழுந்தால் என்ன செய்வது? முதியோர்கள் தேவையற்ற சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க இந்திய தபால் அதிகாரிகளால் ஏன் மாற்று ஏற்பாடுகளை செய்ய முடியாது. என்று கேட்கிறார் சசிகலா சந்திரன்.

கைரேகை சரிபார்ப்பிற்காக சாந்தோமில் உள்ள தங்கள் வீட்டிற்குச் வந்த தபால்காரருக்கு சசிகலா பாராட்டு தெரிவிக்கிறார். “அவர்கள் மிகவும் கடமைப்பட்டவர்களாகவும் அன்பானவர்களாகவும் இருந்தனர்,” என்று அவர் கூறுகிறார்.

புகைப்படம்: சசிகலா சந்திரன்.

<<மயிலாப்பூர் மண்டலத்தில் முதியவர்களை பாதிக்கும் பிரச்சினைகள் உள்ளதா? செய்திகளை எங்களுடன் பகிரவும்.>>

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 weeks ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 weeks ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 weeks ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 weeks ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

1 month ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

1 month ago