செய்திகள்

மயிலாப்பூர் தபால் நிலையத்தில், முதியோர்கள் ஆதார் அட்டை சேவை மையத்தை அணுகுவது மிகுந்த சிரமமாக உள்ளது.

மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகம் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது மேலும் அவ்வப்போது மேலும் பல புது சேவைகளை சேர்க்கிறது.

ஆனால் அதன் வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு சில அடிப்படை வசதிகள் உள்ளதா?

சாந்தோமை சேர்ந்த ஒருவர், தபால் அலுவலக மேலாளர்கள் ஒரு தீவிரமான பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும். பொது சேவைகளுக்கான கவுண்டர்கள் உள்ள சில பகுதிகளை, மூத்த குடிமக்கள் அணுகும் வகையில் எளிதாக்க வேண்டும், முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய இடம் ஆதார் அட்டை சேவைகள் பிரிவு என்று கூறுகிறார்.

95 வயதான தனது தாயாரின் மொபைல் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும், அதை தபால் நிலையத்தில் செய்து கொள்ளலாம் என்று, தபால் அலுவலகத்திற்கு தனது தாயாருடன் வந்த அவருக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டதாக சசிகலா சந்திரன் கூறுகிறார்.

மூத்த குடிமக்களின் கைரேகைகள் தேய்ந்து போவதால், கருவிழி சரிபார்ப்பிற்காக ஆதார் அட்டை போன்ற ஆவணங்களில் அடையாளத்தை இ சேவை அலுவலகத்திலோ அல்லது தபால் நிலையத்திலோ கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்கிறார்.

கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில், ஆதார் அட்டை சேவைகள் வழங்கப்படும் பகுதி கட்டிடத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ளது, அங்கு மூத்தகுடிமக்கள் எளிதில் சென்று வர முடியாதவாறு மூன்று சீரற்ற படிகள் உள்ளன. இதனால் அவர்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது.

மேலும், “வயதானவர்கள் வழுக்கி விழுந்தால் என்ன செய்வது? முதியோர்கள் தேவையற்ற சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க இந்திய தபால் அதிகாரிகளால் ஏன் மாற்று ஏற்பாடுகளை செய்ய முடியாது. என்று கேட்கிறார் சசிகலா சந்திரன்.

கைரேகை சரிபார்ப்பிற்காக சாந்தோமில் உள்ள தங்கள் வீட்டிற்குச் வந்த தபால்காரருக்கு சசிகலா பாராட்டு தெரிவிக்கிறார். “அவர்கள் மிகவும் கடமைப்பட்டவர்களாகவும் அன்பானவர்களாகவும் இருந்தனர்,” என்று அவர் கூறுகிறார்.

புகைப்படம்: சசிகலா சந்திரன்.

<<மயிலாப்பூர் மண்டலத்தில் முதியவர்களை பாதிக்கும் பிரச்சினைகள் உள்ளதா? செய்திகளை எங்களுடன் பகிரவும்.>>

admin

Recent Posts

பழங்கால தமிழ் திரைப்பட ஹிட் பாடல்களின் கச்சேரி. மே 1. அனுமதி இலவசம்

பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…

2 days ago

முத்துசுவாமி தீட்சிதருக்கு அஞ்சலி: தீம் மியூசிக்கல் ஷோ. ஏப்ரல் 28ல்.

மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…

2 days ago

டாக்டர் சித்ரா மாதவன் உரை: தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள். ஏப்ரல் 27

தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…

2 days ago

தற்கொலை செய்து கொண்ட ஒருவரை இழந்த மக்களுக்கு ஆதரவாக சேவையை தொடங்கும் SNEHA அமைப்பு.

ஆர்.ஏ புரத்தில் உள்ள SNEHA, தற்கொலை தடுப்பு சமூக அமைப்பானது, ஏப்ரல் 25 அன்று தற்கொலைக்குப் பிறகு ஆதரவு (SAS)…

4 days ago

இமயத்தின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட நாடகம். ஏப்ரல் 27 மாலை. ஆழ்வார்பேட்டை

சாகித்ய அகாடமி வெற்றியாளர் இமயத்தின் தமிழ் சிறுகதைகளை தழுவி பிரசன்னா ராமசாமி இயக்கிய நாடக அரங்கேற்றம் ஏப்ரல் 27 அன்று…

4 days ago

சென்னை மெட்ரோ: திருமயிலை ரயில் நிலையம் அருகில் கால்வாய் பாலம் இருந்த பகுதியில் ஆழமான அகழாய்வு.

லஸ் மண்டலத்தில் பணிபுரியும் சென்னை மெட்ரோவின் ஒப்பந்ததாரர் திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் எதிரே உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில்…

4 days ago