இந்த சென்னை உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்றவர்கள் வலி, இழப்பு மற்றும் நிதி சிக்கல்கள் அனைத்தையும் தாண்டி வெற்றிபெற்றுள்ளனர்.

மந்தைவெளி, சிருங்கேரி மடம் சாலையில் கால்வாய் ஓரமாக உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பெற்ற இந்த மூன்று மாணவர்களின் விவரங்களை நாம் இங்கு பார்ப்போம்.

முதலிடம் கே.பரமேஸ்வரன் 409/500 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 1வது புகைப்படத்தில் இருப்பவர்.

இந்த மாணவன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தையை இழந்தான், இவனது தாய் குடும்பத்தை நிர்வகித்து, தனது மகனை ஊக்குவித்து வந்தார். சிறுவனின் மூத்த சகோதரி சென்னை மேல்நிலைப்பள்ளி தேர்வில் 531/600 மதிப்பெண்கள் எடுத்து பொறியியல் கவுன்சிலிங்கிற்கு காத்து கொண்டுள்ளார்.

ஆர்.கலைவாணி 389/500 மதிப்பெண்கள் பெற்று இப்பள்ளியில் இரண்டாமிடம் பெற்றார். பரீட்சை தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இவர் தன் தாயை இழந்தார். புகைப்படம் மேலே.

பள்ளியில் மூன்றாமிடம் பெற்ற மாணவி எஸ்.நான்சி 368/500 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் ஒரு நடுத்தர ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆனால் படிப்பறிவுள்ள பெண். கீழே உள்ள புகைப்படத்தில் இருப்பவர் .

மே 31ம் தேதி ஓய்வுபெற உள்ள பள்ளி தலைமையாசிரியர் பால்ராஜ், பல மாணவர்கள் இடையூறுகளை எதிர்கொண்டாலும், கவனம் செலுத்துபவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள், ஆனால் அவர்கள் மேற்கொண்டு படிக்க திட்டமிட்டுள்ளதால் அவர்களுக்கு நிதி உதவி தேவைப்படுகிறது என்கிறார்.

admin

Recent Posts

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

6 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 month ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

1 month ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

2 months ago