இந்த சென்னை உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்றவர்கள் வலி, இழப்பு மற்றும் நிதி சிக்கல்கள் அனைத்தையும் தாண்டி வெற்றிபெற்றுள்ளனர்.

மந்தைவெளி, சிருங்கேரி மடம் சாலையில் கால்வாய் ஓரமாக உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பெற்ற இந்த மூன்று மாணவர்களின் விவரங்களை நாம் இங்கு பார்ப்போம்.

முதலிடம் கே.பரமேஸ்வரன் 409/500 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 1வது புகைப்படத்தில் இருப்பவர்.

இந்த மாணவன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தையை இழந்தான், இவனது தாய் குடும்பத்தை நிர்வகித்து, தனது மகனை ஊக்குவித்து வந்தார். சிறுவனின் மூத்த சகோதரி சென்னை மேல்நிலைப்பள்ளி தேர்வில் 531/600 மதிப்பெண்கள் எடுத்து பொறியியல் கவுன்சிலிங்கிற்கு காத்து கொண்டுள்ளார்.

ஆர்.கலைவாணி 389/500 மதிப்பெண்கள் பெற்று இப்பள்ளியில் இரண்டாமிடம் பெற்றார். பரீட்சை தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இவர் தன் தாயை இழந்தார். புகைப்படம் மேலே.

பள்ளியில் மூன்றாமிடம் பெற்ற மாணவி எஸ்.நான்சி 368/500 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் ஒரு நடுத்தர ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆனால் படிப்பறிவுள்ள பெண். கீழே உள்ள புகைப்படத்தில் இருப்பவர் .

மே 31ம் தேதி ஓய்வுபெற உள்ள பள்ளி தலைமையாசிரியர் பால்ராஜ், பல மாணவர்கள் இடையூறுகளை எதிர்கொண்டாலும், கவனம் செலுத்துபவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள், ஆனால் அவர்கள் மேற்கொண்டு படிக்க திட்டமிட்டுள்ளதால் அவர்களுக்கு நிதி உதவி தேவைப்படுகிறது என்கிறார்.

admin

Recent Posts

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா. மே 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 28ல் தேர் திருவிழா.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…

5 days ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான திரு. பி. வெங்கட்ரமணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…

1 week ago

ஆர். ஏ. புரத்திலுள்ள டாஸ்மாக் ‘எலைட்’ கடையை மூட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை.

ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…

2 weeks ago

மந்தைவெளியில் உள்ள டாஸ்மாக் மது விற்பனைக் கடை நிரந்தரமாக மூடப்பட்டது.

மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…

2 weeks ago

இந்த டிரை கிளீனிங் வாகனம் வீட்டு வாசலுக்கே வந்து சேவை வழங்குகிறது.

உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…

2 weeks ago

தயாராகி வரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரின் புதிய அலுவலகம்.

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…

2 weeks ago