இந்த சென்னை உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்றவர்கள் வலி, இழப்பு மற்றும் நிதி சிக்கல்கள் அனைத்தையும் தாண்டி வெற்றிபெற்றுள்ளனர்.

மந்தைவெளி, சிருங்கேரி மடம் சாலையில் கால்வாய் ஓரமாக உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பெற்ற இந்த மூன்று மாணவர்களின் விவரங்களை நாம் இங்கு பார்ப்போம்.

முதலிடம் கே.பரமேஸ்வரன் 409/500 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 1வது புகைப்படத்தில் இருப்பவர்.

இந்த மாணவன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தையை இழந்தான், இவனது தாய் குடும்பத்தை நிர்வகித்து, தனது மகனை ஊக்குவித்து வந்தார். சிறுவனின் மூத்த சகோதரி சென்னை மேல்நிலைப்பள்ளி தேர்வில் 531/600 மதிப்பெண்கள் எடுத்து பொறியியல் கவுன்சிலிங்கிற்கு காத்து கொண்டுள்ளார்.

ஆர்.கலைவாணி 389/500 மதிப்பெண்கள் பெற்று இப்பள்ளியில் இரண்டாமிடம் பெற்றார். பரீட்சை தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இவர் தன் தாயை இழந்தார். புகைப்படம் மேலே.

பள்ளியில் மூன்றாமிடம் பெற்ற மாணவி எஸ்.நான்சி 368/500 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் ஒரு நடுத்தர ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆனால் படிப்பறிவுள்ள பெண். கீழே உள்ள புகைப்படத்தில் இருப்பவர் .

மே 31ம் தேதி ஓய்வுபெற உள்ள பள்ளி தலைமையாசிரியர் பால்ராஜ், பல மாணவர்கள் இடையூறுகளை எதிர்கொண்டாலும், கவனம் செலுத்துபவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள், ஆனால் அவர்கள் மேற்கொண்டு படிக்க திட்டமிட்டுள்ளதால் அவர்களுக்கு நிதி உதவி தேவைப்படுகிறது என்கிறார்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 weeks ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 weeks ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 weeks ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 weeks ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

1 month ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

1 month ago