தேவாலயம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
தேவாலயத்தை சுற்றியுள்ள தெருக்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தன.
கடந்த சனிக்கிழமை மாலை, சகோ. மானுவல், புனிதர்களின் சிலைகளை எடுத்துச் செல்லும் ஒன்பது தேர்கள் பாதிரியார்களால் ஆசிர்வதிக்கப்பட்டு தேவாலயத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த ஆண்டு, தேக்கு மரத்தில் புதிதாக தேர்கள் செய்யப்பட்டதாக, பங்குத்தந்தை ஒய்.எப்.போஸ்கோ தெரிவித்தார்.
ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட ஒன்பது சிலைகள், தூதர் மைக்கேல், புனித சாண்டியாகோ, புனித செபாஸ்டியன், புனித பிரான்சிஸ் சேவியர், புனித ரோச், பதுவாவின் புனித அந்தோணி, புனித ஜோசப், புனித லாசரஸ் மற்றும் அவர் லேடி (நக்ஷத்ரா மாதா).
இசைக்குழு இசையை லியோ இசைக்குழு வழங்கியது, இந்த ஆண்டு நாதஸ்வரம் குழுவும் இருந்தது. மற்றும் பட்டாசுகள் வானவேடிக்கைகள் இருந்தது.
நள்ளிரவில் ஊர்வலம் மீண்டும் தேவாலயத்திற்கு வந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்கு இங்கிலீஷ் மாஸ் முடிந்து, ஒன்பது சிலைகளும் மீண்டும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…