இளம் வயதினருக்கு புதிய திறன்களை உருவாக்கும் விதத்தில் சிறுவர் தோட்ட மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘பஜார்’ நிகழ்ச்சி.

மயிலாப்பூரில் வார இறுதி நாளான கடந்த சனிக்கிழமை காலை சிறுவர் தோட்ட மேல்நிலைப் பள்ளியில் (சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளி) ‘பஜார்’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பள்ளி வளாகத்தில் ஒரு டஜன் ஸ்டால்களை அமைத்திருந்தனர். தின்பண்டங்கள், வீட்டில் செய்யப்பட்ட தினசரி பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் ஆயத்த வாழ்க்கை முறை பாகங்கள் மற்றும் எளிய கைவினைப்பொருட்களை ஸ்டால்களில் விற்பனை செய்தனர்.

ஸ்டால்களில் விற்பனை செய்த பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை மற்ற மாணவர்கள், சில விருந்தினர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் இந்த தனித்துவமான விற்பனையில் பொருட்களை வாங்கி பங்கு கொண்டனர்.

‘பஜார்’நிகழ்ச்சி என்பது தொழில்முனைவு பற்றி இந்தப் பள்ளியில் நடந்த ஒரு குறுகிய கால பாடத்தின் விளைவாகும்.

பயிற்சியாளர் வனஜா,9-ம் வகுப்பு படிக்கும் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இந்த தொழில்முனைவு பற்றிய பாடத்தை கற்றுக்கொடுத்தார். இந்த பாடம் மாணவிகள் அவர்கள் தங்கள் சொந்த காலில் தங்கள் திறமைகளை வீட்டிலிருந்தோ அல்லது வெளியிலோ மைக்ரோ பிசினஸ் அமைத்து, எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதற்கான எளிய பாடம்.

பள்ளிகளில் மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (எம்.எம்.ஏ) நடத்தி வரும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘பஜார்’ நிகழ்ச்சி இருந்தது.

எம்.எம்.ஏ.வின் பொது மேலாளர் R. வெங்கடராமன் இந்த திட்டங்கள் குறுகியவை என்றும் இதன் மூலம் மாணவர்கள் புதிய திறன்களை அறிமுகப்படுத்துகிறார்கள், என்றும் கூறினார்.

சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளியில், எம்எம்ஏ சமீபத்தில் – கலை, மூளைக்கான பயிற்சி, ரோபாட்டிக்ஸ் மற்றும் ஸ்போக்கன் இங்கிலீஷ், தொழில்முனைவோருக்கான பாடங்கள் போன்ற படிப்புகளை நடத்தியது

இந்த படிப்புகள் தினசரி வகுப்பறை பாடங்களிலிருந்து மாறுபட்டிருந்தது, மேலும் எங்கள் மாணவர்கள் இதன் மூலம் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டனர். என்று பள்ளித் தலைமையாசிரியை ஆர்.எம்.கற்பகாம்பாள் கூறினார்.

ACSYS இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் CSR (கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு) சேவையின் மூலம் வழங்கிய ஆதரவால் இந்த தொகுப்பு MMAவால் சாத்தியமானது.

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

3 weeks ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

2 months ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago