மயிலாப்பூரில் வார இறுதி நாளான கடந்த சனிக்கிழமை காலை சிறுவர் தோட்ட மேல்நிலைப் பள்ளியில் (சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளி) ‘பஜார்’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பள்ளி வளாகத்தில் ஒரு டஜன் ஸ்டால்களை அமைத்திருந்தனர். தின்பண்டங்கள், வீட்டில் செய்யப்பட்ட தினசரி பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் ஆயத்த வாழ்க்கை முறை பாகங்கள் மற்றும் எளிய கைவினைப்பொருட்களை ஸ்டால்களில் விற்பனை செய்தனர்.
ஸ்டால்களில் விற்பனை செய்த பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை மற்ற மாணவர்கள், சில விருந்தினர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் இந்த தனித்துவமான விற்பனையில் பொருட்களை வாங்கி பங்கு கொண்டனர்.
‘பஜார்’நிகழ்ச்சி என்பது தொழில்முனைவு பற்றி இந்தப் பள்ளியில் நடந்த ஒரு குறுகிய கால பாடத்தின் விளைவாகும்.
பயிற்சியாளர் வனஜா,9-ம் வகுப்பு படிக்கும் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இந்த தொழில்முனைவு பற்றிய பாடத்தை கற்றுக்கொடுத்தார். இந்த பாடம் மாணவிகள் அவர்கள் தங்கள் சொந்த காலில் தங்கள் திறமைகளை வீட்டிலிருந்தோ அல்லது வெளியிலோ மைக்ரோ பிசினஸ் அமைத்து, எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதற்கான எளிய பாடம்.
பள்ளிகளில் மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (எம்.எம்.ஏ) நடத்தி வரும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘பஜார்’ நிகழ்ச்சி இருந்தது.
எம்.எம்.ஏ.வின் பொது மேலாளர் R. வெங்கடராமன் இந்த திட்டங்கள் குறுகியவை என்றும் இதன் மூலம் மாணவர்கள் புதிய திறன்களை அறிமுகப்படுத்துகிறார்கள், என்றும் கூறினார்.
சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளியில், எம்எம்ஏ சமீபத்தில் – கலை, மூளைக்கான பயிற்சி, ரோபாட்டிக்ஸ் மற்றும் ஸ்போக்கன் இங்கிலீஷ், தொழில்முனைவோருக்கான பாடங்கள் போன்ற படிப்புகளை நடத்தியது
இந்த படிப்புகள் தினசரி வகுப்பறை பாடங்களிலிருந்து மாறுபட்டிருந்தது, மேலும் எங்கள் மாணவர்கள் இதன் மூலம் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டனர். என்று பள்ளித் தலைமையாசிரியை ஆர்.எம்.கற்பகாம்பாள் கூறினார்.
ACSYS இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் CSR (கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு) சேவையின் மூலம் வழங்கிய ஆதரவால் இந்த தொகுப்பு MMAவால் சாத்தியமானது.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…