இளம் வயதினருக்கு புதிய திறன்களை உருவாக்கும் விதத்தில் சிறுவர் தோட்ட மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘பஜார்’ நிகழ்ச்சி.

மயிலாப்பூரில் வார இறுதி நாளான கடந்த சனிக்கிழமை காலை சிறுவர் தோட்ட மேல்நிலைப் பள்ளியில் (சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளி) ‘பஜார்’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பள்ளி வளாகத்தில் ஒரு டஜன் ஸ்டால்களை அமைத்திருந்தனர். தின்பண்டங்கள், வீட்டில் செய்யப்பட்ட தினசரி பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் ஆயத்த வாழ்க்கை முறை பாகங்கள் மற்றும் எளிய கைவினைப்பொருட்களை ஸ்டால்களில் விற்பனை செய்தனர்.

ஸ்டால்களில் விற்பனை செய்த பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை மற்ற மாணவர்கள், சில விருந்தினர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் இந்த தனித்துவமான விற்பனையில் பொருட்களை வாங்கி பங்கு கொண்டனர்.

‘பஜார்’நிகழ்ச்சி என்பது தொழில்முனைவு பற்றி இந்தப் பள்ளியில் நடந்த ஒரு குறுகிய கால பாடத்தின் விளைவாகும்.

பயிற்சியாளர் வனஜா,9-ம் வகுப்பு படிக்கும் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இந்த தொழில்முனைவு பற்றிய பாடத்தை கற்றுக்கொடுத்தார். இந்த பாடம் மாணவிகள் அவர்கள் தங்கள் சொந்த காலில் தங்கள் திறமைகளை வீட்டிலிருந்தோ அல்லது வெளியிலோ மைக்ரோ பிசினஸ் அமைத்து, எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதற்கான எளிய பாடம்.

பள்ளிகளில் மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (எம்.எம்.ஏ) நடத்தி வரும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘பஜார்’ நிகழ்ச்சி இருந்தது.

எம்.எம்.ஏ.வின் பொது மேலாளர் R. வெங்கடராமன் இந்த திட்டங்கள் குறுகியவை என்றும் இதன் மூலம் மாணவர்கள் புதிய திறன்களை அறிமுகப்படுத்துகிறார்கள், என்றும் கூறினார்.

சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளியில், எம்எம்ஏ சமீபத்தில் – கலை, மூளைக்கான பயிற்சி, ரோபாட்டிக்ஸ் மற்றும் ஸ்போக்கன் இங்கிலீஷ், தொழில்முனைவோருக்கான பாடங்கள் போன்ற படிப்புகளை நடத்தியது

இந்த படிப்புகள் தினசரி வகுப்பறை பாடங்களிலிருந்து மாறுபட்டிருந்தது, மேலும் எங்கள் மாணவர்கள் இதன் மூலம் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டனர். என்று பள்ளித் தலைமையாசிரியை ஆர்.எம்.கற்பகாம்பாள் கூறினார்.

ACSYS இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் CSR (கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு) சேவையின் மூலம் வழங்கிய ஆதரவால் இந்த தொகுப்பு MMAவால் சாத்தியமானது.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago