இளம் வயதினருக்கு புதிய திறன்களை உருவாக்கும் விதத்தில் சிறுவர் தோட்ட மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘பஜார்’ நிகழ்ச்சி.

மயிலாப்பூரில் வார இறுதி நாளான கடந்த சனிக்கிழமை காலை சிறுவர் தோட்ட மேல்நிலைப் பள்ளியில் (சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளி) ‘பஜார்’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பள்ளி வளாகத்தில் ஒரு டஜன் ஸ்டால்களை அமைத்திருந்தனர். தின்பண்டங்கள், வீட்டில் செய்யப்பட்ட தினசரி பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் ஆயத்த வாழ்க்கை முறை பாகங்கள் மற்றும் எளிய கைவினைப்பொருட்களை ஸ்டால்களில் விற்பனை செய்தனர்.

ஸ்டால்களில் விற்பனை செய்த பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை மற்ற மாணவர்கள், சில விருந்தினர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் இந்த தனித்துவமான விற்பனையில் பொருட்களை வாங்கி பங்கு கொண்டனர்.

‘பஜார்’நிகழ்ச்சி என்பது தொழில்முனைவு பற்றி இந்தப் பள்ளியில் நடந்த ஒரு குறுகிய கால பாடத்தின் விளைவாகும்.

பயிற்சியாளர் வனஜா,9-ம் வகுப்பு படிக்கும் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இந்த தொழில்முனைவு பற்றிய பாடத்தை கற்றுக்கொடுத்தார். இந்த பாடம் மாணவிகள் அவர்கள் தங்கள் சொந்த காலில் தங்கள் திறமைகளை வீட்டிலிருந்தோ அல்லது வெளியிலோ மைக்ரோ பிசினஸ் அமைத்து, எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதற்கான எளிய பாடம்.

பள்ளிகளில் மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (எம்.எம்.ஏ) நடத்தி வரும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘பஜார்’ நிகழ்ச்சி இருந்தது.

எம்.எம்.ஏ.வின் பொது மேலாளர் R. வெங்கடராமன் இந்த திட்டங்கள் குறுகியவை என்றும் இதன் மூலம் மாணவர்கள் புதிய திறன்களை அறிமுகப்படுத்துகிறார்கள், என்றும் கூறினார்.

சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளியில், எம்எம்ஏ சமீபத்தில் – கலை, மூளைக்கான பயிற்சி, ரோபாட்டிக்ஸ் மற்றும் ஸ்போக்கன் இங்கிலீஷ், தொழில்முனைவோருக்கான பாடங்கள் போன்ற படிப்புகளை நடத்தியது

இந்த படிப்புகள் தினசரி வகுப்பறை பாடங்களிலிருந்து மாறுபட்டிருந்தது, மேலும் எங்கள் மாணவர்கள் இதன் மூலம் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டனர். என்று பள்ளித் தலைமையாசிரியை ஆர்.எம்.கற்பகாம்பாள் கூறினார்.

ACSYS இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் CSR (கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு) சேவையின் மூலம் வழங்கிய ஆதரவால் இந்த தொகுப்பு MMAவால் சாத்தியமானது.

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago