கத்தோலிக்க மகளிர் பெல்லோஷிப் கதீட்ரல் வளாகத்தில் கணினி அடிப்படை வகுப்புகள் மற்றும் ஸ்போக்கன் இங்கிலீஷ் பற்றிய வகுப்புகளை நடத்துகிறது.

ஜூலியட் ராமமூர்த்தி தலைமையிலான கத்தோலிக்க மகளிர் பெல்லோஷிப்பின் (CWF) மெட்ராஸ் பிரிவு, சாந்தோமில் உள்ள செயின்ட் தாமஸ் கதீட்ரல் வளாகத்தில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மற்றும் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களுக்கு கணினி அடிப்படைகள் மற்றும் ஸ்போக்கன் இங்கிலீஷ் குறித்த இலவச வகுப்புகளை நடத்தி வருகிறது.

இது பெண்களுக்கானது என்றாலும், சில தகுதியான ஆண்களும் இல்லத்தரசிகளும் கூட படிப்பில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கணினி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை இரண்டு தொகுதிகளாக நடத்தப்படுகின்றன.

முதல் தொகுதி பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும், இரண்டாவது தொகுதி மாலை 4.30 முதல் 6.30 மணி வரையிலும் செயல்படும்.

கணினி வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் நலனுக்காக வாரம் இருமுறை ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்தப் படிப்புகள் இலவசம் மற்றும் பதிவுக் கட்டணமாக ரூபாய் 100 மட்டுமே செலுத்த வேண்டும்.

இது நான்கு மாத கால படிப்பாகும், படிப்பின் முடிவில், தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

தற்போது 13 மாணவர்கள் இந்தப் படிப்பை படித்து வருகின்றனர். இந்த திட்டத்தை பெலோஷிப்பின் மீனா கோலாகோ மற்றும் பிலோமினா ஸ்கர்வில்லே மேற்பார்வையிடுகின்றனர்.

CWF மற்றொரு திட்டத்தை நுங்கம்பாக்கம், செயிண்ட் தெரசா தேவாலயத்தில் நடத்துகிறது. அங்கு வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள பெண்களுக்கு ஊசி வேலை மற்றும் தையல் வகுப்புகள் நடத்துகிறது.

செய்தி : ஜூலியானா ஸ்ரீதர்

admin

Recent Posts

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

16 hours ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

5 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 weeks ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

2 weeks ago