சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக லஸ்ஸில் உள்ள பெரிய நிலம் கையகப்படுத்தப்பட்டு அங்கிருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.

லஸ்ஸில் சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட திட்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.

லஸ் வட்டத்தின் இருபுறமும் உள்ள இரண்டு பகுதிகளும், கச்சேரி சாலையில் ஒன்றும், ஸ்ரீ நவசக்தி விநாயகர் கோவிலை ஒட்டிய மற்றொன்றும் தடை செய்யப்பட்டுள்ளன.

லஸ் சர்ச் சாலை மற்றும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை சந்திப்பின் வடக்குப் பகுதியில், விவேக் கடைக்கு எதிரே உள்ள பரந்து விரிந்த நிலம் தற்போது தரிசாகக் கிடக்கிறது, இந்த ப்ளாட்டில் உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டு வெற்று இடமாக காட்சியளிக்கிறது. (புகைப்படம் கீழே)

இது லஸ் மெட்ரோ நிலையத்தின் முக்கிய பணி மண்டலமாக இருக்கும். இங்கு கடந்த வாரம் பூமி பூஜை நடந்தது.

இது பரபரப்பான சந்திப்பு மற்றும் திட்டமும் சவாலானது என்பதால், பூமிக்கு அடியில் இரண்டு ரயில் பாதைகளுக்க்கான இரட்டை ரயில் நிலையங்களின் பணிகள் தாமதமாக மேற்கொள்ளப்படும் என்று சென்னை மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

admin

Recent Posts

மந்தைவெளியில் உள்ள டாஸ்மாக் மது விற்பனைக் கடை நிரந்தரமாக மூடப்பட்டது.

மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…

6 hours ago

இந்த டிரை கிளீனிங் வாகனம் வீட்டு வாசலுக்கே வந்து சேவை வழங்குகிறது.

உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…

6 hours ago

தயாராகி வரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரின் புதிய அலுவலகம்.

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…

1 day ago

கிழக்கு அபிராமபுரத்தில் உள்ள இந்தகடையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மாம்பழங்கள்.

இந்தக் கோடைக்காலத்தை முன்னிட்டு, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் பண்ணைகளிலிருந்து பெறப்பட்ட, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட புதிய மாம்பழங்கள் கிழக்கு அபிராமபுரத்தில்…

3 days ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மாநில அமைச்சராகப் பதவியேற்பு

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கடரமணன், முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு விழா…

5 days ago

மயிலாப்பூர் புதிய சட்டமன்ற உறுப்பினர், உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய மூன்று முக்கியப் பிரச்சினைகளைப் பட்டியலிட்டுள்ளார்; போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைக் கையாள்வது அவற்றில் ஒன்றாகும்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர், TVK கட்சியைச் சேர்ந்த பி. வெங்கடராமணனின் நிகழ்ச்சி நிரலில் மூன்று பிரச்சினைகள் முதலிடம்…

1 week ago