சென்னை மெட்ரோவின் சாந்தோம் மயிலாப்பூர் பிரிவு பாதாள ரயில் பாதை திட்டத்தில் ஒரு பெரிய நடவடிக்கை செப்டம்பர் 1 வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது மற்றும் அது காந்தி சிலைக்கு அருகில் மெரினாவில் நடந்தது.
பிளமிங்கோ என்று பெயரிடப்பட்ட ஒரு ராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம், பூமிக்கு அடியில் துளையிடும் பணியை மேற்கொண்டது. சாலை மட்டத்திற்கு கீழே, லைட் ஹவுஸ் பக்கத்திற்கு அருகில் ஒரு பூஜை செய்யப்பட்ட பிறகு இது நடந்தது.
அடுத்த பல வாரங்களுக்கு இயந்திரம் இந்த பணியை மேற்கொள்ளும்.
சிவில் ஒப்பந்ததாரர்கள் லஸ் வட்டத்தைச் சுற்றி முதல் கட்ட சிவில் பணிகளையும் தொடங்கியுள்ளனர். சுக நிவாஸ் உணவகம் அமைந்துள்ள லஸ் சர்ச் சாலையில் உள்ள ஒரு பகுதியில் தடுப்புகள் போடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இன்னும் சில மாதங்களில், திருமயிலை எம்ஆர்டிஎஸ் ஸ்டேஷன் அருகே, மயிலாப்பூரையும் மந்தைவெளியையும் லஸ்ஸுடன் இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாயின் மேல் உள்ள பாலத்தை இடிக்க வேண்டும். சென்னை மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக ஐடி காரிடார் உள்ளது. இந்த பாதை அடையாரை இணைக்கும்.
மதன் குமாரின், லைட் ஹவுஸ் அருகே சுரங்கம் தோண்டும் இயந்திரதை பற்றிய வீடியோவை பாருங்கள். https://www.youtube.com/shorts/VLUF61GhV4w
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…