ராகமாலிகா அடுக்குமாடி குடியிருப்பில் நவராத்திரி கொண்டாட்டங்கள் (திருவேங்கடம் தெரு, ஆர்.ஏ. புரம்), இந்த பெரிய சமூகத்தினருக்கும் மற்றும் மக்களுக்கும் ஒரு சிறந்த நிகழ்வாக இருந்தது.
சமுதாயக் கூடத்தில் ஒரு பெரிய கொலு அமைக்கப்பட்டிருந்தது – அது ராகமாலிகாவின் குடியிருப்பாளர்கள் கொடுத்த பொம்மைகளால் உருவாக்கப்பட்டது.
கொலுவின் ஒரு பகுதி தீம் செட் – ஒரு சமூகப் பூங்காவில் சிறுவர்கள் ஊஞ்சல், சறுக்கு மற்றும் சீசாவில் விளையாடுகிறார்கள். சில பொம்மைகள் குழந்தைகளால் செய்யப்பட்ட எளிமையானவை.
விழாவின் ஒவ்வொரு நாளும் லலிதா சஹஸ்ரநாமம் பாடப்பட்டது.
வெவ்வேறு வயது குழந்தைகளின் நடனம், பாட்டு அல்லது இன்ஸ்ட்ருமெண்டல் நிகழ்ச்சிகள் இருந்தது.
மேடையில் இருந்த குழந்தைகளுக்கு வெத்தல பாக்கு (வெற்றிலை மற்றும் பாக்கு) மற்றும் சுண்டல் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
அக்டோபர் 22 அன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டாண்டியா இரவு – பல குழுக்களின் கர்பா நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. பின்னர், நடன தளம் சமூகத்திற்கு திறக்கப்பட்டது மற்றும் இரவு சிற்றுண்டி நிகழ்ச்சியை நிறைவு செய்தது. அக்டோபர் 23ல் நடந்த சரஸ்வதி பூஜையுடன், பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.
செய்தி: அபர்ணா நடராஜன்
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…