மெரினா குப்பம் பகுதியில் பெரும் பொருட்செலவில் கட்டப்பட்ட சமுதாய கூடம் பயன்பாடின்றி கிடக்கிறது.

அதிமுகவின் ஆர்.நடராஜ் மயிலாப்பூர் எம்எல்ஏவாக இருந்தபோது, டூமிங்குப்பம் பகுதியில் மெரினா லூப் சாலையில் சமுதாயக்கூடம் கட்ட பொதுமக்கள் நலன் கருதி எம்எல்ஏ நிதியுதவித் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து கையெழுத்திட்டார். உள்ளூர் கோரிக்கைகளின் அடிப்படையில் இது நடந்ததாக அவர் கூறுகிறார்.

இந்த மண்டபம் கட்டப்பட்டு நீண்ட நாட்களாக பூட்டியே கிடப்பதாகவும், இதை பயன்படுத்த காலதாமதம் செய்வதால் பொதுமக்களின் பணம் விரயமாகும் என்றும், தற்போதைய எம்.எல்.ஏ.வோ அல்லது அரசு அதிகாரிகளோ ஏன் கண்டுகொள்ளவில்லை என தெரியவில்லை, என்று நடராஜ் தெரிவித்தார்.

இந்த இடம் சில வாரங்களுக்கு முன்பு எம்.எல்.ஏ., தா.வேலுவால் முறையாக திறக்கப்பட்டது, ஆனால் அது இன்னும் மூடப்பட்டுள்ளது.

இந்த இடம் சமுதாய விழா அல்லது திருமண மண்டபத்துக்காக கட்டப்பட்டது என்று தான் கருதியதாகவும், ஆனால் அது இல்லை என்றும், சமையலறை, ஸ்டோர் ரூம், வாஷ் ஏரியா போன்ற வசதிகள் இங்கு இல்லை என்றும் வேலு கூறுகிறார்.

“சமூக சந்திப்புகள், சுயஉதவி குழுக்கள் பயிற்சி போன்றவற்றுக்கு இரண்டு நீண்ட அரங்குகள் மட்டுமே உள்ளன” என்று எம்எல்ஏ கூறுகிறார். “இது ஒரு பொது நோக்கத்திற்காக பயன்படுத்தப்படலாம்.”

admin

Recent Posts

மூத்த குடிமக்களுக்காக. சுகாதார உரையாடல், பழைய பாடல்கள் பாடுதல், யோகா மற்றும் பிராண சிகிச்சை அமர்வுகள். அனைத்தும் இலவசம்.

நீங்கள் ஒரு மூத்த குடிமகனா? இலவசமாக வழங்கப்படும் சிறிய நிகழ்வுகளில் உங்களுடன் ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் சேர ஆர்வமாக உள்ளீர்களா?…

1 hour ago

மதிய உணவிற்குப் பிரபலமான சைவ உணவகமான ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம். இப்போது, ​​சிற்றுண்டி வகைகளையும் வழங்குகிறது.

டி' சில்வா சாலையில் உள்ள பிரபலமான சைவ உணவகமான ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம், சமீபத்தில் தனது உணவுப் பட்டியலை விரிவுபடுத்தியுள்ளது –…

1 hour ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் பிப்ரவரி 7ல் மருத்துவ முகாம். சில பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகின்றன.

ஆர். ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிள சபா வளாகத்தில் அமைந்துள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில், பிப்ரவரி 7…

1 day ago

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவர்களுக்காக சிறப்பு ஹோமம்.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவர்களுக்காக, ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் பிப்ரவரி 7…

4 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது; குளத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மூன்று நாள் தைப்பூசத் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை (பிப்ரவரி 1) தொடங்கியது. கபாலீஸ்வரப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…

5 days ago

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

2 weeks ago