மெரினா குப்பம் பகுதியில் பெரும் பொருட்செலவில் கட்டப்பட்ட சமுதாய கூடம் பயன்பாடின்றி கிடக்கிறது.

அதிமுகவின் ஆர்.நடராஜ் மயிலாப்பூர் எம்எல்ஏவாக இருந்தபோது, டூமிங்குப்பம் பகுதியில் மெரினா லூப் சாலையில் சமுதாயக்கூடம் கட்ட பொதுமக்கள் நலன் கருதி எம்எல்ஏ நிதியுதவித் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து கையெழுத்திட்டார். உள்ளூர் கோரிக்கைகளின் அடிப்படையில் இது நடந்ததாக அவர் கூறுகிறார்.

இந்த மண்டபம் கட்டப்பட்டு நீண்ட நாட்களாக பூட்டியே கிடப்பதாகவும், இதை பயன்படுத்த காலதாமதம் செய்வதால் பொதுமக்களின் பணம் விரயமாகும் என்றும், தற்போதைய எம்.எல்.ஏ.வோ அல்லது அரசு அதிகாரிகளோ ஏன் கண்டுகொள்ளவில்லை என தெரியவில்லை, என்று நடராஜ் தெரிவித்தார்.

இந்த இடம் சில வாரங்களுக்கு முன்பு எம்.எல்.ஏ., தா.வேலுவால் முறையாக திறக்கப்பட்டது, ஆனால் அது இன்னும் மூடப்பட்டுள்ளது.

இந்த இடம் சமுதாய விழா அல்லது திருமண மண்டபத்துக்காக கட்டப்பட்டது என்று தான் கருதியதாகவும், ஆனால் அது இல்லை என்றும், சமையலறை, ஸ்டோர் ரூம், வாஷ் ஏரியா போன்ற வசதிகள் இங்கு இல்லை என்றும் வேலு கூறுகிறார்.

“சமூக சந்திப்புகள், சுயஉதவி குழுக்கள் பயிற்சி போன்றவற்றுக்கு இரண்டு நீண்ட அரங்குகள் மட்டுமே உள்ளன” என்று எம்எல்ஏ கூறுகிறார். “இது ஒரு பொது நோக்கத்திற்காக பயன்படுத்தப்படலாம்.”

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago