மயிலாப்பூரில் தம்பதிகள் கொலை. குற்றம் நடந்த சில மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசார்.

மயிலாப்பூரில் உள்ள துவாரகா காலனியில் வசித்த வந்த தம்பதிகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கை, குற்றம் நடந்து 6 மணி நேரத்திற்குள் போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

குற்றம் நடந்த இடத்தில் தங்களுக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் சந்தேக நபர்களின் தொலைபேசி அழைப்பு பதிவுகளின் அடிப்படையில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஓங்கோலில் குற்றவாளிகளை கண்டுபிடித்து, அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தம்பதிகள் – ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா – அவர்களுடைய மகளுடன் இருந்தனர். கடந்த சனிக்கிழமை அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்துவிட்டனர்; அவர்கள் சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் விமான நிலையத்திலிருந்து நீணடகாலமாக அவர்களது வீட்டில் பணியற்றிவரும் வீட்டு உதவியாளர் மற்றும் நேபாள டிரைவரால் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தம்பதியரின் மகள் அமெரிக்காவிலிருந்து அவர்கள் வீட்டிற்கு பாதுகாப்பாக சென்று விட்டனரா என்று விசாரிப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர்களுடைய தொலைபேசிகள் அணைக்கப்பட்டிருந்தது.

பின்னர் அவர் தன்னுடைய உறவினர்களுக்கு தகவல் கொடுத்து அவர்கள் ஜம்மி காம்ப்ளக்ஸ் மண்டலத்தில் ராயப்பேட்டை ஹை ரோட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது தம்பதிகள் வீட்டில் இல்லை. உடனடியாக மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

வீட்டில் இருந்து விசாரணை தொடங்கியது. போலீசார் டிரைவரை தொடர்பு கொள்ள முயன்றனர், ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் தம்பதியரின் வீட்டில் இருந்த பெட்டகம் மற்றும் அலமாரி உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும் கண்டனர்.

டிரைவரின் அழைப்பு பதிவுகள் கண்காணிக்கப்பட்டு, சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவரும் அவரது கூட்டாளியும் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்.

தம்பதியினர் வீட்டிற்குள் நுழைந்த உடனேயே ஓட்டுநரும் அவரது கூட்டாளியும் கனரக கருவியால் தம்பதியை தாக்கியுள்ளதால் தம்பதிகள் மரணமடைந்துள்ளனர் என்று போலீசார் கூறுகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீட்டில் இருந்த ரத்தக் கறைகளை சுத்தம் செய்து, இறந்தவர்களை காரில் ஏற்றி, மாமல்லபுரம் அருகே உள்ள பண்ணைக்கு வீட்டில் இறக்கி, சடலங்களை ஒரு குழியில் புதைத்து, பின்னர் நகரத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

admin

Recent Posts

தொல்காப்பியப் பூங்காவின் முகத்துவாரப் பகுதி வற்றி வருகிறதா?

தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…

1 day ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம்: மார்ச் 16

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்), திங்கட்கிழமை, மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல்…

4 days ago

இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி, அரிசி பொருட்கள் விற்பனை.

மயிலாப்பூர் வாரன் சாலையில் வசிக்கும் அதிதி, 2025 முதல் பாரம்பரிய நெல் வகைகளின் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் அரிசி…

4 days ago

சட்டம், மேலாண்மை படிப்புகளுக்கான ஆலோசனை.

அபிராமபுரத்தில் அமைந்துள்ள கேரியர் லாஞ்சர் நிறுவனம், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு 9, 10 மற்றும் 11…

4 days ago

எரிபொருள் நெருக்கடி: விடியற்காலை முதலே பெட்ரோல் பங்க் பரபரப்பாக உள்ளன

ஹோட்டல் உட்லண்ட்ஸுக்கு எதிரே உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப கார்கள் மற்றும் பைக்குகள்…

4 days ago

எல்பிஜி நெருக்கடி: மக்கள் எரிவாயு நிறுவனத்தை நோக்கிச் செல்கிறார்கள், சிறிய கேட்டரிங் நிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளன

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள ஒரு எரிவாயு நிறுவனத்திற்கு வெளியே புதன்கிழமை, மக்கள் கூட்டம் அலைமோதியது. எரிவாயு விநியோகம்…

5 days ago