மயிலாப்பூரில் தம்பதிகள் கொலை. குற்றம் நடந்த சில மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசார்.

மயிலாப்பூரில் உள்ள துவாரகா காலனியில் வசித்த வந்த தம்பதிகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கை, குற்றம் நடந்து 6 மணி நேரத்திற்குள் போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

குற்றம் நடந்த இடத்தில் தங்களுக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் சந்தேக நபர்களின் தொலைபேசி அழைப்பு பதிவுகளின் அடிப்படையில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஓங்கோலில் குற்றவாளிகளை கண்டுபிடித்து, அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தம்பதிகள் – ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா – அவர்களுடைய மகளுடன் இருந்தனர். கடந்த சனிக்கிழமை அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்துவிட்டனர்; அவர்கள் சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் விமான நிலையத்திலிருந்து நீணடகாலமாக அவர்களது வீட்டில் பணியற்றிவரும் வீட்டு உதவியாளர் மற்றும் நேபாள டிரைவரால் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தம்பதியரின் மகள் அமெரிக்காவிலிருந்து அவர்கள் வீட்டிற்கு பாதுகாப்பாக சென்று விட்டனரா என்று விசாரிப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர்களுடைய தொலைபேசிகள் அணைக்கப்பட்டிருந்தது.

பின்னர் அவர் தன்னுடைய உறவினர்களுக்கு தகவல் கொடுத்து அவர்கள் ஜம்மி காம்ப்ளக்ஸ் மண்டலத்தில் ராயப்பேட்டை ஹை ரோட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது தம்பதிகள் வீட்டில் இல்லை. உடனடியாக மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

வீட்டில் இருந்து விசாரணை தொடங்கியது. போலீசார் டிரைவரை தொடர்பு கொள்ள முயன்றனர், ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் தம்பதியரின் வீட்டில் இருந்த பெட்டகம் மற்றும் அலமாரி உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும் கண்டனர்.

டிரைவரின் அழைப்பு பதிவுகள் கண்காணிக்கப்பட்டு, சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவரும் அவரது கூட்டாளியும் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்.

தம்பதியினர் வீட்டிற்குள் நுழைந்த உடனேயே ஓட்டுநரும் அவரது கூட்டாளியும் கனரக கருவியால் தம்பதியை தாக்கியுள்ளதால் தம்பதிகள் மரணமடைந்துள்ளனர் என்று போலீசார் கூறுகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீட்டில் இருந்த ரத்தக் கறைகளை சுத்தம் செய்து, இறந்தவர்களை காரில் ஏற்றி, மாமல்லபுரம் அருகே உள்ள பண்ணைக்கு வீட்டில் இறக்கி, சடலங்களை ஒரு குழியில் புதைத்து, பின்னர் நகரத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

admin

Recent Posts

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியா பூங்கா மீண்டும் திறப்பு. பார்வையாளர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி குழுக்கள் பார்வையிடலாம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…

2 days ago

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

3 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

3 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

3 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

1 month ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

1 month ago